Saturday 30 May 2020

இலங்கை என்றால் இயற்கை வனப்பு மிக்க ஆறுகளும்..கால்வாய்களும் .பசும் புற்களூம் ..அடர்காடுகளும் செழித்த வனப்பு மிக்க பூமி....என்று எப்பவும் தெரியும்...
ஆனால்...அங்குள்ள மக்கள் பலரும் 19-ம் நூற்றாண்டு வாழ்க்கையையே இந்த நவீன காலத்திலும் வாழ்ந்திருப்பார்கள் போல...என்றுதான் நான் வாசித்த பெரும்பாலான இலங்கை தொடர்பான நூற்கள் எனக்கு உணர்த்தியிருக்கின்றன...
சர்வ சாதாரணமாக தமிழகத்தில் எப்பவோ வந்து விட்ட வசதிகள் கூட அங்கு அப்பவும் வரவில்லையோ..?என்று எண்ணத் தோன்றும்...அதற்கு இந்த நூலும் விதிவிலக்கல்ல...
காடுகள்...சரியான சாலைகள் வசதியின்மை...போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாமை..இன்னபிற குறைகளுடன்தான் அம்மக்கள் எப்போதும் அல்லுபட்டிருக்கின்றனர்.
இப்போது ஒருவேளை நிலைமை மேம்பட்டிருக்கலாம்.
இயற்கைச் செழிப்பின் பசுமையில்...அம்மக்களுக்கு நிலைபேறான வாழ்வு எக்காலத்திலும் கிட்டியதில்லையோ...? என்று எண்ணத் தோன்றும்...
#ஓட்டமாவடிஅறபாத்தின் இந்த நினைவுகளின் ஊஞ்சலும் இவ்வாறான எண்ணத்தையே என்னுள் ஆரம்பமாக விதைத்தது...போகட்டும்.
காடுகளும்..காட்டினுள் வாழ்ந்த பசுமை வாழ்வுமாக துவங்கும் அறபாத் மெல்ல...மெல்ல...தனது அரபுக் கல்லூரி வாழ்க்கை...அதன் இறுக்கமான ...அதேசமயம் துடிப்பான ஓட்டம் என வேகமெடுக்கிறார்...
பெற்றோர்களைப் பிரிந்து கல்வியின் நிமித்தம் ஊர் ஊராக திரிகிறார்...ஜின்களோடும்...பேய்களோடும் மானசீகமாக கட்டிப் புரள்கிறார்...சாமியாட்டத்தையும் எவ்வித மனத்தடையின்றியும் ரசிக்கிறார்...
இனமுரண்கள் நிறைந்த இலங்கை கிழக்குமாகாண முஸ்லிம்களின் வாழ்க்கையில் புலிகள் ரத்த சாட்சியாக குறுக்கிடுகிறார்கள்...
அறபாத்தின் எழுத்தை வைத்து பார்க்கும் போது...அக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு என்ற ஒரு அமைப்பே...செயலில் இல்லையோ...என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது...
புலிகளும்...ராணுவமும் ஆளாளுக்கு தாங்கள் நினைத்த பகுதியில் அராஜகம் செய்திருக்கிறார்கள்...எந்த விதியும் இல்லை...எந்த ஒழுங்கும் இல்லை...கேட்பார்யாரும் இல்லை. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.
இதில் அமைதிப்படையாக இங்கிருந்து சென்ற இந்திய ராணுவம் வேறு அடடகாசம் புரிகிறது...
மனித உயிர்களுக்கு ஒரு மயிர் அளவேனும் கூட மதிப்பில்லை...
கட்டுப்பாடற்ற ஒரு வன்முறைக் கும்பலின் கைகளில் ஆயுதம் கிடைத்தால் என்னவாகும் ...?என்பதற்கு முதலும் முடிவுமான அகோர சாட்சி புலிகள்தான்.
புலிகளின் அமைப்பில் ஆரம்பக்காலத்தில் நிறைய முஸ்லிம்களும் பங்கெடுத்திருக்கிறார்கள் .அவர்களும் புலிகளின் இயல்பான வெறிக் குணத்தையே பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதற்கு இந்நூலில் வரும் புகாரியே சாட்சி.
பிரபாகரனுக்கு பிற்காலத்தில் எது நடந்ததோ...அதுவே புகாரிக்கும் முன்பே நடந்தது...கத்தி எடுத்தவன்..............
புலிகளுக்கும் ரணிலுக்கும் சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் புலிகள் முஸ்லிம்களை ரண வேட்டையாடி இருக்கிறார்கள்.
ராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்திருக்கிறது. அவர்களூக்குத்தான் புலிகளோடு சண்டையில்லையே...? பிறகு எவன் எப்படிச் செத்தால் அவர்களுக்கு என்ன...?கேட்க நாதியில்லாத அவலம்.
ராணுவமும் புலிகளும் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட அக்காலங்களில் நூலாசிரியரும் அவரது நண்பர்களும் அவர்கள் பணியாற்றும் அட்டாளைச்சேனை என்ற ஊரிலிருந்து வாகன வசதியின்றி நடந்தே அவரவர் ஊர்களுக்குச் செலலும் சமயம் புலிகளால் மறிக்கப்படவும்...அவர்களை அந்த இக்கட்டான நிலையில் இருந்து ஒரு பாதிரியார் மீட்டு வாகனத்தில் ஏற்றி அவரவர்கள் சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.கிட்டத்தட்ட அனைவரின் உயிர்களையும் காப்பாற்றி இருக்கிறார்
அவரது பெயர் வண. T.கிங்ஸ்லி றொபர்ட் ...
இந்தப் பெயரை முன்பே எங்கோ படித்திருக்கிறோமே...என்ற ஒரு சந்தேகத்தில் புத்தகத்தை புரட்டினால்...இப்புத்தகமே..அந்த பாதிரியாருக்கத்தான் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது...
இன்றைக்கு ஈஸ்டர் தின கொடிய நிகழ்வுகளை இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து சஞ்சலம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை....!!
பிரபாகரன் பற்றிய ஆசிரியரின் ஒரு குறிப்போடு முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...
"அவர் உலகமகா கோழை என்பதற்கு அவரின் சரணடைதலும் இழிவான சாவும் கண்கண்ட சாட்சி. ஒரு வீரன் எதிரியுடன் பொருதி மடிவதுதான் வீரத்திற்கு இலக்கணம் தப்பியோடும் போது சாவைத் தழுவுவது எவ்வளவு அவமானம்...?! (பக் -123)
பட்டு அனுபவித்த ஒரு நொந்த மனத்தில் அல்லாது வேறு எந்த மனத்திலும் இந்த வார்த்தை வராது.
இலங்கை #எங்கள்தேசம் வாராந்திர இதழில் வெளிவந்த இந்த தொடர் கட்டுரை தொகுப்பை அழகுற நூலாக பதிப்பித்திருப்பது #காலச்சுடு நிறுவனம்.
பாராட்டுககள் ஓட்டமாவடி அறபாத்
நன்றி காயல் சுஹைப் முஹ்ம்மது காக்கா 

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...