Wednesday 4 August 2010

மரணக்கரங்கள்

உனக்கென்ன
சட்டமியற்ற கைகள் உயர்த்துவாய்
இருக்கின்ற சட்டங்களோ இருக்கமாயுள்ள
இக்கனத்தில்,
இன்னுமின்னும் குரல்வளையை நெரிக்கும்
உன் கைதூக்கல்.

நீ-வியர்க்காமல் பயணிக்க
குளிர் ஊர்தியுண்டு
வானிலும் பறந்தேகுவாய்
தங்குமிடம்,வாகனம்,பெட்ரோல்,டெலிபோன்,
போனேசசென
உன் பை நிரம்பும் எம் வரிப்பணத்தில்.

உன் மெய் காக்க படையுண்டு
ஏவலரும் இன்னும் சில அடியாலும்
உனக்குண்டு
உன் குழந்தைகளோ கடல் தாண்டி அறிவுண்ணும்

உனக்கென்ன குறையுண்டு தலைவா
இரவிரவாய் விலையுர
நீ உயர்த்தும் கைகள்
உனக்கு வாக்குப்போட்ட
எம் கழுத்தையல்லோ நெரிக்கிறது.


2000-05-05 யாத்ரா-2001

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...