Monday 6 June 2011

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

ஆசிரியர் 
அஷ்ஷெய்க் .எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி
ஸ்லாத்தின் பெயரால் உலகில் பல்வேறு பிரிவுகள் பல்கிப்பெருகியுள்ள இத்தருனத்தில் காலத்தின் தேவை உணர்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூல்.
நூலாசிரியர் ஏற்கனவே தமிழ்கூறும் உலகிற்கு ஆய்வு நூல்களைத் தந்து இஸ்லாமிய வாசகரிடையே பிரபல்யம் மிக்கவர். 'ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்',  'ஷாபி மத்ஹபின் சட்டங்களை அவமதிக்கலாமா?'   'யாரிந்த போராக்கள் '  போன்ற ஆசிரியரின் நூல்கள் வாசகரிடையே அதிகம் பேசப்பட்டது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் என்ற நூலில் மொத்தம் நாற்பத்தி ஆறு தலைப்புக்களில்  பல உட்பிரிவுகள் ஆராயப்பட்டுள்ளன.  இருநூற்றி நாற்பது பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை தமிழ்நாட்டில் முன்னணி புத்தக நிலையமான சாஜிதா புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றியுள்ள முக்கியமான வழி கெட்ட இயக்கங்களானகாதியானிகள்,ஹவாரிஜீன்கள்,ஷீஆக்கள்,அஷ்அரீய்யாக்கள், ஜஹ்மீய்யாக்கள்,  முஃதஸிலாக்கள், போராக்கள். போன்ற பிரிவுகள் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே அதன் தோற்றம்,இயக்கம்,செயற்பாடுகள் தொடர்பான புள்ளி விபரங்களுடன் மிகத்துல்லியமாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஷீஆக்கள் நிறுவன மயப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றனர். இராஜதந்திர முயற்சியின் ஊடாக அவர்களின் அரசியல் மற்றும் கொள்கை பரப்பும் பிரச்சார முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நூலில் ஷீயாக்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக்காட்ட பல் வேறு சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆன்  அஸ்சுன்னாவை மையப்படுத்திய முக்கிய ஆதாரங்களுடன், ஷீயாக்களின் தகிடுத்தத்தங்களை வெளிச்சமிட்டுக்காட்டும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு கணம் சேர்க்கும் முயற்சியாகும்.

 இஸ்லாமிய வரலாற்றுச்சான்றாதாரங்களும், ஆசிரியரின் ஆய்வு நிலை முயற்சியும் நூலின் வாசிப்புக்கு வலிமை சேர்க்கின்றன.
ஏனைய வழிகெட்ட அமைப்புக்கள்,பிரிவுகளை விட, ஷீயா என்பது  சர்வதேச வலைப்பின்னலைக்கொண்ட பிரிவாகும். கிராமங்கள் தோறும் கலாச்சாரப்புரட்சி ,இஸ்லாமிய அட்சி, அமெரிக்க எதிர்ப்புணர்வுக்கொள்ளை,இஸ்ரேலுக்கெதிரான அறிக்கைகள். போன்ற சில சில்லறை விடயங்களை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதில் ஷீயாக்கள் கைதேர்ந்தவர்கள்.இவர்களின் இந்த தீராத விளையாட்டுக்களை நூலாசிரியர் மிக தெளிவான சான்றுகளுடன் இந்நூலில் முன்வைக்கின்றார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம், சாதாரண வாசிப்பறிவும், தேடலும் உள்ளவர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியாகும். வழிகெட்ட பிரிவுகளை இனங்காட்டி சாதாரண பொது வாசகனும்,தீவீர வாசகனும் புரிந்து கொள்ளும் மொழி மிக முக்கியமானது. இதனை நூலாசிரியர் கச்சிதமாகவே செய்துள்ளார்.

மொழியின் இறுக்கம் தளர்கின்ற பொது  ,கருத்துக்கள் அதிக வாசகரிடையே ஆதிக்கம் செலுத்துகின்றது. அது நுலூக்கு கிடைக்கும்  மகத்தான வெற்றி.
சில இயங்கங்களின் பொது வேலைத்திட்டங்களிலும்,ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொள்கை கூச்சலிலும் மயங்கும் படித்த பாமர முஸ்லிம்கள் மிக எளிதாகவே வழிகெட்ட இயக்கங்களின் நடவடிக்களை நியாயப்படுத்த முனைகின்றனர். அவர்களுக்கு கூஜா தூக்கி நல்லவர்கள் என்ற 'லேபலை' வேறு குத்திவிடுகின்றனர்.
உண்மையில் இத்தகைய ஆய்வு நூல்கள் மூலம்  போலி லேபல்கள் கிழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஆவணப்படத்தொகுப்பைப்போல் இந்த ஆய்வு  நூல் கடின உழைப்பின் பின் நமது கரங்களை அலங்கரிக்கின்ற போது முழுத்தகவல்களையும் ஒரு சேரப்படித்த திருப்தியை நூல் தருகின்றது.
அவசியம்  படித்து பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...