Thursday 25 August 2016

நூல் அறிமுகம்

அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் மற்றும் பண்புகனை விரிவாக விளக்கும் முதல் தர தமிழ் நூல்
ஆசிரியர் .அஷ்ஷெய்க்.எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி M.A

மிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான ரிஸ்வான் மதனியின் அயராத முயற்சி ஆய்வின் பலனாக அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் என்ற விரிவான நூல் நம் கையில் கிடைத்துள்ளது.

சமயம் பற்றிய அறிவின் அவசியம் உணரப்படும்போதெல்லாம் சமயத்தினை வழங்கிய மூலவேர் குறித்த அடிப்படை அறிவு தேவைப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றுவாய்க்கு காரணியாக இருந்த மூலத்தின் வல்லமைகள் சிறப்புக்கள் குணவியல்புகளை அறியாமல் பிரபஞ்சத்தில் வாழ்வதும் அவற்றின் இன்பங்களை துய்ப்பதும் நன்றி கொன்ற செயலெனக்கொள்வது பொருந்தும்.

புனித இஸ்லாத்தை மனித வாழ்வின் அற்புத வழிகாட்டியாக வழங்கிய அல்லாஹ் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் ஐயமற விளக்கம் சொல்கின்றது இந்நூல்.376  பக்கங்களில் 49 தலைப்புக்களில் அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார்.

நாமறிந்தவரை அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள்தான்.இது நமக்கு மரபு ரீதியாக கற்றுத்தரப்பட்டவை.இவற்றினை மீறி அவனுக்கு வேறு பெயர்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில் நாம் ஈடுபடவுமில்லை. தேடவுமில்லை. எனினும் நம்மை படைத்து ஆளுபவனுக்கு இன்னும் பல திருநாமங்கள் இருக்கின்றன. என்ற ஆய்வின் மூலம் உன்னத வரலாற்று சிறப்பினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றார் ரிஸ்வான் மதனி

ஓவ்வொரு தலைப்பிற்கும் பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களும்.தேவையேற்படின் நபிகளாரின் சுன்னாவும் உசாத்துணையாக எடுத்தாளப்பட்டுள்ளன.அல்லாஹ்வைப்பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் குறித்து அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து பண்புகளும் குணவியல்புகளும், அவன் வல்லமையை பறைசாற்றும் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதானது இந்நூலின் சிறப்பம்சம் எனில் மிகையல்ல.

இதற்காக நூலாசிரியர் துறைசார் நூல்களை தேடிப்படித்து தொகுத்திருப்பதனை பாராட்டவே வேண்டும்.

எல்லா சிந்தனைகளுக்கும் பிரிவுகள் கருத்து முரண்பாடுகள் தோன்றியது போல் அல்லாஹ்வின் பண்புகள் பெயர்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் சர்ச்சைகளும் இஸ்லாமிய உலகில் சில  குழுக்களால் தோற்றுவிக்கப்பட்டன.

எனவே அடிப்படை கொள்கையினை அதாவது அகீதாவை விளங்கிச்செயற்பட அல்லாஹ்வின் பண்புகள் குறித்த நேர்பார்வை அவசியம். தவறான புரிதல்களும் வியாக்கியானமும் அல்லாஹ்வின் மீது அடியான் கொள்ள வேண்டிய நம்பிக்கையினை சிதைத்துவிடும்.அவனை தவறான கொள்கையின்பாலும் சிந்தனையின்பாலும் கொண்டு சேர்த்து விடும்.வழிதவறும் குழுக்களின் மனவோட்டத்தை ஒழுங்கமைக்க சீரிய சிந்தனை ஊட்டப்படவேண்டியது அவசியம். அவற்றினை நமது சலபுஸ்ஸாலிஹீன்களான மதிப்பிகு இமாம்கள் செவ்வனே ஆற்றியிருக்கின்றார்கள்.அவர்களின் அயராத முயற்சியும் ,எழுச்சியும் வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளின் கனிசமான உருவாக்கத்தினை தடைசெய்தன.அல்லது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தன.

 இந்த சிந்தனைப்பிரிவுகள் யார் அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அவர்களின் பார்வை என்ன எவ்வகையான பண்புகளில் மாறுபட்ட கருத்துவேற்றுமைகள் உள்ளன போன்ற விடயங்களை தமிழில் விளக்கும் ஆய்வு நூல்கள் இல்லாத குறையை இந்நூல் பெரிதும் நிவர்த்தி செய்துள்ளது.

குறிப்பாக அல்லாஹ்வின் பண்புகள்,பெயர்கள் தொடர்பான விதிகள் அவற்றிற்கான வரைவிலக்கணம் போன்ற அம்சங்களை துலாம்பரமாக விளக்குகின்றது இந்நூல்.

இஸ்லாமிய உலகில் தோன்றிய கண்ணியமிக்க இமாம்களின் கருத்துக்கள் அல்லாஹ் பற்றிய சரியான வரைவிலக்கணங்கள் குறித்து பேசும் அதே வேளை அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை பாழ்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்களையும் அது குறித்த அபாயத்தினையும் ஆய்வு செய்கின்றது இந்நூல்.

அல்லாஹ்வையும் அவனது திருநாமங்களையும் சரியான கோணத்தில் விளங்கி விசுவாசம் கொள்ளவும்,உறுதியான அவனின் திருநாமங்களின் உள்ளர்த்தங்களை புரிந்து செயற்படவும்  இந்நூல் பெரிதும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை முழுமையான ஆய்வாக தமிழில் தருவதற்கு பிரயத்தனங்களை எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ரிஸ்வான் மதனியின் முயற்சியை பாராட்டுகின்றோம்.அவரின் ஆய்வுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும்.அவசியம் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய இந்நூலை வாங்கி வீடுகளில் வைத்திருந்து வாசித்து விளங்குவோம்.

ஓட்டமாவடி அறபாத் -ஸஹ்வி 

நூல் அறிமுகம்

அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் மற்றும் பண்புகனை விரிவாக விளக்கும் முதல் தர தமிழ் நூல்
ஆசிரியர் .அஷ்ஷெய்க்.எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி M.A

மிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான ரிஸ்வான் மதனியின் அயராத முயற்சி ஆய்வின் பலனாக அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் என்ற விரிவான நூல் நம் கையில் கிடைத்துள்ளது.

சமயம் பற்றிய அறிவின் அவசியம் உணரப்படும்போதெல்லாம் சமயத்தினை வழங்கிய மூலவேர் குறித்த அடிப்படை அறிவு தேவைப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றுவாய்க்கு காரணியாக இருந்த மூலத்தின் வல்லமைகள் சிறப்புக்கள் குணவியல்புகளை அறியாமல் பிரபஞ்சத்தில் வாழ்வதும் அவற்றின் இன்பங்களை துய்ப்பதும் நன்றி கொன்ற செயலெனக்கொள்வது பொருந்தும்.

புனித இஸ்லாத்தை மனித வாழ்வின் அற்புத வழிகாட்டியாக வழங்கிய அல்லாஹ் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் ஐயமற விளக்கம் சொல்கின்றது இந்நூல்.376  பக்கங்களில் 49 தலைப்புக்களில் அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார்.

நாமறிந்தவரை அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள்தான்.இது நமக்கு மரபு ரீதியாக கற்றுத்தரப்பட்டவை.இவற்றினை மீறி அவனுக்கு வேறு பெயர்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில் நாம் ஈடுபடவுமில்லை. தேடவுமில்லை. எனினும் நம்மை படைத்து ஆளுபவனுக்கு இன்னும் பல திருநாமங்கள் இருக்கின்றன. என்ற ஆய்வின் மூலம் உன்னத வரலாற்று சிறப்பினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியிருக்கின்றார் ரிஸ்வான் மதனி

ஓவ்வொரு தலைப்பிற்கும் பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களும்.தேவையேற்படின் நபிகளாரின் சுன்னாவும் உசாத்துணையாக எடுத்தாளப்பட்டுள்ளன.அல்லாஹ்வைப்பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் குறித்து அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து பண்புகளும் குணவியல்புகளும், அவன் வல்லமையை பறைசாற்றும் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதானது இந்நூலின் சிறப்பம்சம் எனில் மிகையல்ல.

இதற்காக நூலாசிரியர் துறைசார் நூல்களை தேடிப்படித்து தொகுத்திருப்பதனை பாராட்டவே வேண்டும்.

எல்லா சிந்தனைகளுக்கும் பிரிவுகள் கருத்து முரண்பாடுகள் தோன்றியது போல் அல்லாஹ்வின் பண்புகள் பெயர்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் சர்ச்சைகளும் இஸ்லாமிய உலகில் சில  குழுக்களால் தோற்றுவிக்கப்பட்டன.

எனவே அடிப்படை கொள்கையினை அதாவது அகீதாவை விளங்கிச்செயற்பட அல்லாஹ்வின் பண்புகள் குறித்த நேர்பார்வை அவசியம். தவறான புரிதல்களும் வியாக்கியானமும் அல்லாஹ்வின் மீது அடியான் கொள்ள வேண்டிய நம்பிக்கையினை சிதைத்துவிடும்.அவனை தவறான கொள்கையின்பாலும் சிந்தனையின்பாலும் கொண்டு சேர்த்து விடும்.வழிதவறும் குழுக்களின் மனவோட்டத்தை ஒழுங்கமைக்க சீரிய சிந்தனை ஊட்டப்படவேண்டியது அவசியம். அவற்றினை நமது சலபுஸ்ஸாலிஹீன்களான மதிப்பிகு இமாம்கள் செவ்வனே ஆற்றியிருக்கின்றார்கள்.அவர்களின் அயராத முயற்சியும் ,எழுச்சியும் வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளின் கனிசமான உருவாக்கத்தினை தடைசெய்தன.அல்லது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தன.

 இந்த சிந்தனைப்பிரிவுகள் யார் அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அவர்களின் பார்வை என்ன எவ்வகையான பண்புகளில் மாறுபட்ட கருத்துவேற்றுமைகள் உள்ளன போன்ற விடயங்களை தமிழில் விளக்கும் ஆய்வு நூல்கள் இல்லாத குறையை இந்நூல் பெரிதும் நிவர்த்தி செய்துள்ளது.

குறிப்பாக அல்லாஹ்வின் பண்புகள்,பெயர்கள் தொடர்பான விதிகள் அவற்றிற்கான வரைவிலக்கணம் போன்ற அம்சங்களை துலாம்பரமாக விளக்குகின்றது இந்நூல்.

இஸ்லாமிய உலகில் தோன்றிய கண்ணியமிக்க இமாம்களின் கருத்துக்கள் அல்லாஹ் பற்றிய சரியான வரைவிலக்கணங்கள் குறித்து பேசும் அதே வேளை அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை பாழ்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்களையும் அது குறித்த அபாயத்தினையும் ஆய்வு செய்கின்றது இந்நூல்.

அல்லாஹ்வையும் அவனது திருநாமங்களையும் சரியான கோணத்தில் விளங்கி விசுவாசம் கொள்ளவும்,உறுதியான அவனின் திருநாமங்களின் உள்ளர்த்தங்களை புரிந்து செயற்படவும்  இந்நூல் பெரிதும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை முழுமையான ஆய்வாக தமிழில் தருவதற்கு பிரயத்தனங்களை எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ரிஸ்வான் மதனியின் முயற்சியை பாராட்டுகின்றோம்.அவரின் ஆய்வுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும்.அவசியம் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய இந்நூலை வாங்கி வீடுகளில் வைத்திருந்து வாசித்து விளங்குவோம்.

ஓட்டமாவடி அறபாத் -ஸஹ்வி 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...