தடித்த குரலுயர்த்திப்பேசிலேன்
பிறர் அஞ்சுதற்குறிய
கொடூரனுமல்ல நான்.
எனினும்
நாடு நிசியில்
வஞ்சித்தென்
கழுத்தை எனறுத்தீர்.?
என் துவிச்சக்கரவண்டியே
சந்தூக்கானது.
முன்னர் எரித்தவரின்
அபயக்குரல் அடங்கு முன்
என் கழுத்தை
எனறுத்தீர் சொல்லுங்கள்.
பொங்கலுக்கா பலி எடுத்தீர்
ஈழத்தர்ச்சணைக்கா எனை எடுத்தீர்.?
கத்தியை செருகி என்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தேசிய கீதமாக்கவா
திட்டமிட்டீர்.?
அறுபத்தைந்து வருஷங்கள்
வாழ்ந்தவொரு கிழவன் நான்
ஒரு கோழியைக்கூட
திருகத்தெரியா வயோதிபனை
கதறக்கதற அறுத்தனையோ
வீரர்காள்.?
இளம்பிறையை எரித்துண்ட
கல்மடுக்கிராமமே
இனி உன்னில் யுகாந்திரமாய்
அலையுமென் அபயக்குரல்.
அது உன் பிச்சலத்தின் ஆணிவேரை
உசுப்புமொரு நாள்.
அப்போதுணர்வாய்
துண்டிக்கப்படுகையில்
என் வலியை!
பிறர் அஞ்சுதற்குறிய
கொடூரனுமல்ல நான்.
எனினும்
நாடு நிசியில்
வஞ்சித்தென்
கழுத்தை எனறுத்தீர்.?
என் துவிச்சக்கரவண்டியே
சந்தூக்கானது.
முன்னர் எரித்தவரின்
அபயக்குரல் அடங்கு முன்
என் கழுத்தை
எனறுத்தீர் சொல்லுங்கள்.
பொங்கலுக்கா பலி எடுத்தீர்
ஈழத்தர்ச்சணைக்கா எனை எடுத்தீர்.?
கத்தியை செருகி என்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தேசிய கீதமாக்கவா
திட்டமிட்டீர்.?
அறுபத்தைந்து வருஷங்கள்
வாழ்ந்தவொரு கிழவன் நான்
ஒரு கோழியைக்கூட
திருகத்தெரியா வயோதிபனை
கதறக்கதற அறுத்தனையோ
வீரர்காள்.?
இளம்பிறையை எரித்துண்ட
கல்மடுக்கிராமமே
இனி உன்னில் யுகாந்திரமாய்
அலையுமென் அபயக்குரல்.
அது உன் பிச்சலத்தின் ஆணிவேரை
உசுப்புமொரு நாள்.
அப்போதுணர்வாய்
துண்டிக்கப்படுகையில்
என் வலியை!