Wednesday 27 April 2011

மறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல்

இலக்கியத்தளத்தை காலம் நிச்சயித்து வந்திருக்கின்ற காலத்தில்,காலத்தின் பெறுமானத்தை இலக்கியங்கள் விம்பங்களாக்கி விடுகின்றன.காலத்திக் மகா பிரதிநிதியாக இயங்குபவன் இலக்கியக்காரன். அவன் உணர்வும், உவகையும் இலக்கியடமும் தாகமும் கொண்ட உயிரி.

மண் புழுவொன்று மண்ணைத்துளைத்துக்கொண்டு உள் நுழைந்து செல்வது போல மானுட தாகத்தால் உணர்வு பொங்க வாழ்வின் குறுக்கு முகத்தில் பயணிப்பவன் இலக்கியக்காரன்.

அத்தகைய பயணிப்பின் பிரதிபலிப்புத்தான் படைப்பு.படைப்புக்களில் சிறுகதை ஒரு மகா வடிவம். இது தனக்கென புதிய புதிய வடிவத்தைத்தேடித்தேடி திளைக்கிறது.

பழைய கதை மரபுகளை உடைத்துக்கொண்டு கதையின் கட்டுமானங்கள்,நுட்பம் இழையோடும் மொழியாட்சி,கருயுதி என வடிவமற்ற வடிவமாய் கதை வெளி விரிவு பெறுவதனை தமிழ் மொழிச்சிறுகதைப்பரப்பிலும் கானுகிறோம்.

கதை சொல்லி முக்கியமான ஆளுமையாக நம் மன் முகம் காட்டுகிறான்.நமது முஸ்லிம் கதை சொல்லிகளில் இத்தகைய நவீன பரப்புக்குள் இயங்குகின்ற சிலரில் சிலாகிக்கத்தக்கவராக மேற்கிளம்புகிறவர் ஓட்டமாவடி அறபாத்.

அறபாத் எண்பதுகளுக்குப்பின்னரான எழுத்துத்தளத்தில் முனைப்போடு வெளிப்படுபவர்.கவிதை,கதை,விமர்சனம்,ஆன்மீகம், என பல தளங்களில் செயற்படுபவர்."எரி நெருப்பிலிருந்து",    "வேட்டைக்குப்பின்" ,இவர் கவிதையில் ஓய்ந்து விட்டாரோ என ஊகிக்கத்தக்தெனினும்,கதை சொல்லலி்ல் அறபாத் புதிய குரலோடு பரிமளிக்கின்றார். 'நினைந்தழுதல்', "ஆண்மரம்' , திரட்டுக்களின் வழியே உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி யாக புதிய தொனியுடன் வெளிக்கிளம்புகிறார் அறபாத்.

அறபாத்தின் எழுத்து வீச்சார்ந்தது.உணர்வு பொங்கிப் பிரவகிப்பது.சொல் நுட்பத்தால் வாசகரை இழுக்கும் மந்திரம் மிகுந்தது,யதார்த்தமானது: தொய்வற்ற நகர்ச்சித்தனம் உடையது. இத்தகைய கட்டிறுக்க மொழியூடாக அறபாத் சொல்ல முற்படும் கதைப்பொருள் நமது சமூகத்தின் பிரதி விம்பமாக இருக்கின்றது. எனவேதான் அறபாத் முஸ்லிம் கதைப்பரப்பில் நவீன கதை சொல்லியாக தெரிபடுபவர்களில் முக்கியமானவராக நமது கவனிப்பை ஈர்க்கின்றார்.

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி- அடையாளம் பதிப்பகத்தால் அடையாளம் காணப்பட்டது.முஸ்லிம் சமூக முன்னோடி வாப்பிச்சி மரிக்காயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில்  'கழுதைகளில் விஜயம்' முதலாக 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும மிச்சமிருக்கின்றன.' வரையான 32 கதைப்பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வாசிக்கப்பட்ட கதைகள் இதனுள் அடங்கினும் மீள வாசிக்கின்ற போது மேலும் புதிய வாசிப்புத்தளம் விரிவடைகின்றது என்ற வகையிலும் இப்பிரதிகள் அவதானத்திற்குட்படுகின்றன.

உள்நிலை அரசியல் சின்னத்தனங்கள்,வன்முறையின் கொடூரமான அடையாளங்கள்.பெண்ணிலை வாழ்க்கை ,சமூக வாழ்வின் அன்றாட அவலங்களின்  கோலம், அன்பி்ன் அடைய முடியாத ஆழம், கனவுகள் ,ஏக்கங்கள்,பரவசங்கள் என சமூக வாழ்வின் கதைப்பொருள்கள் அமைகின்றன.

 ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் உடைந்த கண்ணாடியாய்த்தான் இருக்கிறது.அந்தக்கண்ணாடியில் ஏதோ ஒரு விதத்தில் அவனது இயக்கம் மறைந்திருக்கிறது என்பதானாலோ என்னவோ அறபாத்தின் கதை மாந்தர்களும் உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவியான நமது வாசிப்பில் வெளிப்படுகிறார்கள்.

அறபாத் தேர்ந்த வாசிப்புடையவர்.தீராத தேடலுடையவர்,நுட்பம் மிக்க இலக்கிப்பார்வை மிக்கவர். என்பதனை அவரது கதகளை தொகுத்து வாசிக்கும் போது இனங்கான முடிகிறது என்பதனால் நமது முஸ்லிம் கதைப்பரப்பில் இன்னுமு புதிய பாய்ச்சல்களை அறபாத் ஏற்படுத்துவார் என நம்பிக்கை கொள்வது வீணாகப்போவதில்லை.

-மர்யம்.

நன்றி : விடி வெள்ளி மார்ச் 31

Tuesday 5 April 2011

கனவு மெய்ப்பட.........

சொல்வதற்கு வெட்கமில்லை.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அளவுக்கதிமாகவே இருந்தது.சக்தி தொலைக்காட்சியின் கனவு மெய்ப்பட வேண்டும் பாடலில் பித்துப்பிடித்து ஆடிக்கத்திய வபாவின் குரலிலும் அந்த நம்பிக்கை கேட்கத்தான் செய்தது.

எங்கும் நீக்கமற மறைந்திருக்கும் அரசியல் இரும்புக்கரங்கள் விளையாட்டிலும் விளையாடி விட்டன.

இலங்கை கிரிக்கட் அணி மட்டும்தான் உலகில் இனவாதத்தால் கட்டியெழுப்பட்ட அணி என்று நினைக்கின்றேன்.சிங்கள தேசியவாதம் மலிந்த வக்கிரக் குழுவினரின் வழிநடத்தலால் திறமைக்கு முதன்மை என்பது போய் இனத்திற்கே முன்னுரிமை என்ற நிலை அங்கு.முத்தையா முரளீதரனைத்தவிர.

உலக நாடுகளில் அவுஸ்திரேலியா,நியுசிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் திறமையான முஸ்லிம்களை இனங்கண்டு கிரிக்கட் அணியில் இணைத்துள்ளதைப்பார்க்கும் போது இலங்கையில் ஊறியுள்ள இனவாதத்தின் வக்கிரத்தை அளவிட முடிகிறது.

உண்மையில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை வென்றிருந்தால் அதை இந்தியாவுக்கெதிரான போரில் ஜெயித்தது போல் ஒரு பிரமை கட்டமைக்கப்பட்டிருக்கும்.
இங்கு தமிழர்களை தோற்கடித்த இரண்டாவது வெற்றிப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கலாம். போரிலும், விளையாட்டிலும் தீராத விளையாட்டுப்பிள்ளை என்ற இறுமாப்பு அரச தலைவர்களின் மனங்களில் குடி கொண்டு ஆட்டிப்படைத்திருக்கும் என்பது நிச்சயம்.

திறமை என்பது மங்கி, இந்த நாட்டின் வெற்றியை தீர்மானிப்பது, உழைப்பது எல்லாம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத விதி நீண்ட காலமாக கிரிக்கட்டில் நிலவுகிறது. இதை மாற்றாத வரை பாகிஸ்தானுக்கு கொடி பிடிக்கின்ற கூட்டத்தை திருத்துவது மகா கஸ்டம்.

இலங்கை அணி வென்றால் கெத்தாராம விளையாட்டரங்கிற்கு அருகாமையில் உள்ள முஸ்லிம்களை ஒரு கை பார்ப்போம் என்று கறுவிச்சென்ற சிலருக்கு இரத்தக்களரியைக்காணாதது வருத்தம்தான்.
பாகிஸ்தானும் இலங்கையும் விளையாடியபோது அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தமைக்கான அச்சுறுத்தல் அது.

(இலங்கையின் வளங்களை பகிர்ந்து கொண்டு விளையாட்டில் மட்டும் பாகிஸ்தானை ஆதரிப்பதை எதிர்ப்பவன் நான். )

இந்த ஆதரவுக்கு என்ன பின்னணி என்பதை திலங்க சுமதிபால போன்ற இனவாதிகள் அறிந்து அவற்றை நீக்க வேண்டும்.

இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை அணிக்கு நாட்டு மக்களும் அரசாங்கமும் அளித்த மகத்தான வரவேற்பு, இலங்கை அணி்க்கு நிச்சயம் மனவலிமையை கொடுத்திருக்கும். அது வரவேற்கத்தக்கது.

இலங்கை கிரிக்கட் அணி இனிவரும் காலங்களில் இனத்துவத்துடன் நோக்கப்படாமலிருக்க பல்லினத்தவர்களிலும் திறமையுள்ளவர்கள் இனங்காணப்பட்டு உள்வாங்கப்படவேண்டும். அதிலிருக்கும் மோசமாக அரசியல் விசமிகள் களையப்படவேண்டும். நாடு தேசியம் என்ற எல்லைகளுக்குள் விளையாட்டை தக்கவைப்பதுதான் எதிர்காலத்தில் அணியின் வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும்.

கடைசியாக இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி முழு நாடே சோகத்தில் உறைந்திருக்க சக்தி தொலைக்காட்சி மட்டும் பழைய விளம்பரங்களை போட்டு நாம் வெல்வோம் என படம் காட்டியதை பார்த்தவர்கள் ஆடித்தான் போனோம். இது சக்திக்கு ரொம்ப ஓவராகத் தெரியல்ல????

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...