Tuesday 27 November 2018

25/11/2018
நேற்றிரவு உண்ட பின் நூறடி உலாவு என்பதற்கொப்ப வீட்டிலிருந்து வீதிக்கு வந்தேன் . முற்றமும் அது தான். கூடவே எனது சின்ன மகளும் 3 1/2 வயது.
நிலவு வானத்தில் ஏகமாய் குந்திக் கொண்டிருந்தது.
மகளிடம் நிலவைக் காட்டினேன். மேகம் வந்து அதனை மூடிப் போனது
அபீ நிலவ அழிக்கிது என்று வருத்தப்பட்டாள்.
இப்ப பாருங்க நிலவு வெள்ளயா போகும் என்று அவள் துயரத்தை துடைத்தேன் . சற்று நேரத்தில் மேகம் விலக பளீரென நிலவு பிரகாசித்தது.
அபீ மேல பாரு என்னப் போல நெலா வெள்ளயா இருக்கு . அவள் கண்களுக்குள் ஓராயிரம் பெளர்ணமிகள் ததும்பி பிரவகிக்க பொங்கித்தான் போனேன்

Ajwa

26.11.2018
மழை நாளில் எழுத்தும் வாசிப்பும் கூடிக்குலாவும் .இன்று மாலை வாசித்து முடித்த என்னை ஆகர்ஷித்த நாவல் சரவணன் சந்திரனின் அஜ்வா .
"அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதலின் அடையாளம்' இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்கள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள் "
ஒரு சொட்டு வைரம் உன் அன்பு
ஒரு சொட்டு வைரம் உன் அன்பு
---------------------------------------------------
எனது இனிய நண்பர் ஓட்டமாவடி அரபாத், ''நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்" எனும் அவர் பத்தி எழுத்துக்களின் தொகுப்பை என் வாசல் தேடி வந்து தந்து விட்டு, "ஒரு சொட்டு வைரம் உன் அன்பு" என்று நிரூபித்துச் சென்றார்.
அரபாத் - 'மூத்தம்மா' என்ற கதையை அன்று வெளி வந்த, 'சரிநிகரி"ல் படித்து நான் அழுதிருக்கிறேன்; இதே போல் பாடப் புத்தகத்தில் அந்தக் கதை வந்திருக்கும் போது, எனது இளைய மகன் படித்து விட்டுக் 'கண் கலங்குது வாப்பா' என்கிறான்.
இப்படிப் பலரையும் தகர்த்த உங்கள் கதைகளுக்குப் பின் சோவெனக் கொட்டிய மழைதானா அரபாத் இந்த நீர் ஊஞ்சல்?
எஸ்ஸெல்லம் சொல்வது போல்
"படிப்பவர் மனதில் பரவசத்தையும் தமது உசுக்குட்டிப் பருவத்தின் நினைவுகளையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச் செய்திருக்கிறார்."
உங்களின் முதல் அத்தியாயத்தின் சிலும்பில் சிலாகித்து உங்களை உச்சி முகர்ந்திருக்கிறது வறுமை.
கொடூர வறுமையின் காலம் அது.
பொழுது விடிந்தால் டீக்கும் உணவுக்கும் கடன் கேட்க ஆள் தேடும் காலத்தில் நீங்கள் ரெயில் ஏறி வியாபாரம் செய்து சில்லறைகளைச் சேர்த்து அற்ப சொற்பமாகப் பசியாறும் நிலையிலும் இடைவிடாது நீங்கள் கவிதை மனதுடன் வாழ்வும் சாவுமாய் இருந்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைக்கான ஒரே ஒரு ஆன்மத் துணையாக எழுத்து மட்டுமே இருந்தது. அதனை எந்தக் கணத்திலும் விடாது உங்கள் விரல் பற்றியபடியே வந்து கொண்டிருந்தது அது.
உங்களால் அதைக் கேடயமாகவும் கொள்ள முடிந்தது.
தொப்புள் கொடி அறுபடும் முன்பே ஆர்வத்துடன் தூக்கும் குழந்தையைப் போன்று ஒவ்வொரு அத்தியாயங்களையும் படிக்க முடிகிறது அரபாத்.
பள்ளிப் பருவச் சித்து விளையாட்டுகளில் எல்லாச் சிறுவர்களையும் போல் இறங்கிய நீங்கள் அரசியல் வாழ்பனுபங்கள் என்ற நிழல்களோடும் பயணிக்கிறீர்கள்.
நடு வழியில் நம்மை ஆழப்படுத்திய உங்கள் கதைகளுடன் கழித்த எண்ணற்ற இரவுகளின் மனப்பூர்வீகமான ஒரு பெருமிதம் இந்த நினைவுகளில் தொங்குகின்றது.
நன்றி அரபாத்.
-நபீல்.

Thursday 14 June 2018

எஸ்.எல்.எம். ஹனீபாவின் முக நூல் பக்கத்திலிருந்து ....


Image may contain: text

எஸ்.எல்.எம். ஹனீபாவின் முக நூல்  பக்கத்திலிருந்து ....
கடந்துபோன சென்னைப் புத்தக சந்தையில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்த ஓட்டமாவடி அறபாத் அவர்களின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்” பற்றிய ஒரு சிறு குறிப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் பத்தி எழுத்துக்களின் தொகுதி. அறபாத் நூலின் முன்னுரையில் சொல்வது போல உசுக்குட்டிப் பருவத்து நினைவுகளை மீட்டிப் பார்க்கும் அழகிய காட்சிப் படிமங்கள்.
நினைவுகளில் தேங்கி நிற்கும் ஒரு சொட்டு நீரும் திரும்பிப் பார்க்கையில் என்னமாய் தக தகவென ஜொலிக்கின்றது.
கிடுகு வேயப்பட்ட முகடு, முற்றத்தில் பெரிய மாமரம், சற்றுத் தொலைவில் கிணறு, கிணற்றைச் சூழவும் கமுகு மரங்கள், தண்ணீரள்ளத் துலா, வீட்டைச் சுற்றி அடைக்கப்பட்ட கிடுகு வேலி, அக்கம்பக்கம் சாச்சிமார்களும், மூத்தம்மாமாரும், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்வர கோடியில் ஒரு நுழைவுவாயில், இது அறபாத்தின் வாக்குமூலம்.
தனது எழுத்துக்கள் மூலம் படிப்பவர் மனதில் பரவசத்தையும், தங்களின் இளமைப்பருவத்தின் மறக்கமுடியாத நினைவுகளையும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் பிரவாகமாக ஓடச் செய்திருக்கிறார். அவரின் அனுபவங்கள் நமது அனுபவங்களாகி நமது மனசும் அவரின் எழுத்துக்களோடு அள்ளுன்டு போகிறது.
1996 “எரிநெருப்பிலிருந்து” எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமான அறபாத் 20 வருட எழுத்தூழியத்தின் மூலம் தன்னை சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
கதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என்று 11 நூல்களின் சொந்தக்காரர். தனது படைப்புக்களுக்கு மாகாண, தேசிய ரீதியிலும் பல விருதுகளைப் பெற்றவர்.
அறபாத்தின் ஒவ்வொரு காலடிமண்ணின் ஈரமும், வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டி களிப்பூட்டுகிறது.
நூலிலிருந்து ஒரு பத்தி...
ரணிலும், பிரபாகரனும் சமாதானம் செய்து கொண்ட பின் வெடிச் சத்தங்கள் தற்காலிகமாக ஓய்ந்திருந்தன. இலங்கை ஆர்மியுடன் தான் சண்டையை நிறுத்தினார்கள் புலிகள். கிழக்கு முஸ்லிம்களோ இக்காலத்தில் தான் அதிகம் இழப்புக்களை எதிர்கொண்டனர். ஆட்கடத்தல், கப்பம் பெறல், கொலை, கொள்ளை என புலிகள் சமாதானத்தை முஸ்லிம்களுக்கு எதிரான போராயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
வாழைச்சேனையிலிருந்து கல்குடா, கல்மடு போன்ற இடங்களுக்கு சமையலுக்கு சென்ற இரு முஸ்லிம்களை (ஹயாத்து முஹம்மது அய்னுத்தீன், ஹயாத்து முஹம்மது ஜனூஸ்தீன் ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்) கொலை செய்து (2002 ஜுன் 27ம் திகதி) ஜனாஸாவை (உடலம்) இராணும், பொலிஸார், சட்டத்தரணிகள், நீதிபதி முன்னிலையில் எரித்து சாம்பலாக்கிய நெஞ்சை உறைய வைத்த கொடூர நிகழ்வும் இக்காலத்தில்தான் நடந்தது.
அறபாத் நூலில் தமிழ், முஸ்லிம் உறவு, புலிகளுடனான தனக்குள்ள அந்நியோனியம், புலிகளை வெறுத்த தருணங்கள் என்று ஒரு கழைக்கூத்தாடியின் நிதானத்துடனும் பக்கசார்பின்றியும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலைக்கூட தனது உயிரைப்பாதுகாத்து வழியனுப்பி வைத்த திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. T. கிங்ஸ்லி றொபர்ட் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை - ரூ. 180

Image may contain: 4 people, including Arafath Sahwi and Slm Hanifa, people smiling, people standing and beard

Image may contain: 2 people, including Arafath Sahwi
Image may contain: 2 people, including Arafath Sahwi, people standing



Image may contain: 8 people, including Mohamed Nasir and Arafath Sahwi, people sitting and indoor
Image may contain: 7 people, people sitting




ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் பதினான்காவது அமர்வான ஓட்டமாவடி அறபாத்தின் "நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்" நூல் அறிமுகமும் உரையாடலும் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நூலாசிரியர் அறிமுகத்தை மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவும், நூல் தொடர்பான தனது பார்வையை தோழர் மலர்ச்செல்வனும் முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அறபாத்தின் எழுத்துக்கள் எனும் தலைப்பில் தோழர் ஜிப்ரி ஹாசனும், வாசிப்பு வட்ட செயற்பாடுகள் தொடர்பில் கலாசார உத்தியோத்தர் அஷ்ஷெய்க் நழீம் அவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நூலின் ஆசிரியர் ஓட்டமாவடி அறபாத்தினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக நூல் வெளியீடு இடம்பெற்றது.
இவ்வமர்வுக்கு என்னோடு ஒத்துழைத்த தோழர்களான பைறூஸ், ஜெம்ஸித் ராபி, அஃப்ழல், அஸ்லம், பதுறுஸ்ஸமான்,அல் அமீன், EEDI கல்வி நிறுவனத்துக்கும் மற்றும் அழகாக புகைப்படம் பிடித்துத் தந்த குலாம் முஸம்மில் அவர்களுக்கும் கலந்து கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
உருட்டிப்பழம் எனப்படும் உக்குரஸ் காய் நாலைந்து கொண்டு வந்த பகிர்ந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மாமாவுக்கு விஷேட நன்றிகள்.
வழங்கப்பட்ட வாழைப்பழம் கொஞ்சம் பச்சையாக இருந்தமைக்கு மன வேதனைகள்.
தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே

ஓட்டமாவடி அரபாத்தும் ஏறாவூர் சப்ரியும்




ஓட்டமாவடி அரபாத்தும் ஏறாவூர் சப்ரியும்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மே மாதம் மூன்றாம் திகதி……வெறித்தனத்தில் ஜஸ்டின் பீபரின்வெஸ்டர்ன் ஆடிக் கொண்டிருந்தது வெயில்…..அவிந்து துடிக்கின்ற கடல் படு பயங்கரமாக ஆவியாகிக் கொண்டிருக்கின்ற நடுப்பகல் பொழுது….இரண்டு மணியிருக்கும்,…..வழமைக்கு மாறாக நேரத்தோடு கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டேன்…வியாழக் கிழமைகளில் வழமையாக வீடு வர ஐந்து அல்லது மணியாகி விடும். இன்று நீதவான் நீதிமன்றத்தில் துலக் முதலியார் எனப்படுகின்ற மொழிபெயர்ப்பாளர் கல்தா என்பதால் எல்லா விளக்க வழக்குகளும் வாயிதா………அதனால்தான் இந்த ஏர்லி ரிட்டேர்ன்………….மனைவியின் அண்ணல் நகர் உம்மா வீட்டில் மூத்தவன் அரீப் முராதிடம் மழலை பாஷை கற்றுக் கொண்டிருந்தேன்.
“அஸ்ஸலாமு அலைக்கும்…சபருள்ளாஹ் எங்கே இருக்கிறீங்க” செல்லின் மறு முனையில் ஓட்டமாவடி அரபாத்….”
வஅலைக்குமுஸ்ஸலாம்…எப்படி இருக்கீங்க…எங்க இருக்கீங்க……” சடர்ன் சேர்ப்ரைஸ்
“ட்ரின்கோக்கு ஒரு வேலையா வந்தேன்……வேல முடிஞ்சி ஒன் த வே ட்டூ ஊர்………இப்ப கிண்ணியாவ நெருங்கிக்கிட்டு இருக்கேன்….சந்திக்கலாமா”
“வை நொட்…….வித் ப்ளெஷர்” உற்சாகமானேன்.
ஓட்டமாவடி அரபாத்தை நீண்ட காலமாகத் தெரிந்தாலும் பத்து பதினைந்து வருட இடைவெளியில் இரண்டாம் தடவை சந்திக்கப் போகின்றேன்…..இந்த முறை ஃபுல் பெக்கேஜில்………………இலக்கியர்களை சந்தித்து உரையாடுகின்ற தருணங்கள் நுரைக்கின்ற ஷாம்பைன் சமாச்சாரம்…..அதுவும் ரியல் இலக்கியக்காரர்கள் என்றைக்குமே ரெஃப்ரெஸ்ஷிங் மோட்……அவர்களை சந்தித்து உரையாடுதல் என்பதே போன்விட்டா ப்ளஸ் ஹோர்லிக்ஸ் கலவையில் இம்மீடியட் எனர்ஜி.
கிண்ணியாப் பாலத்தைக் கடந்து அப்படியே மட்டக்கிளப்பு வீதியால் முச்சந்தியைக் கடந்து வந்தால் தோனா பீச்சுக்கு முன்னால் வடிகட்டப்பட்ட காற்றை வாசித்தவாறு இருக்கின்றது கிண்ணியா பாயிஸா அலியின் வீடு. அங்கு வந்து பாயிசா அலியோடு பேசிக் கொண்டிருப்பதாக தகவல் தந்தார்கள். மகன் அரீபையும் அள்ளிக் கொண்டு கவிதாயினி பாயிசா அலி வீட்டுக்கு சென்றேன். அல்ஹம்துலில்லாஹ் ஓட்டமாவடி அரபாத்..அவருக்கு அருகாமையில் முகத்தில் தாடிக்கு வெளியே எட்டிப்பார்க்கின்ற புன்னகையோடு ஏறாவர்ர் சகோதரன் சப்ரியும்….இரண்டு பேருக்கும் கை கொடுத்து சலாம் சொல்லி “கிளாட் ட்டூ மீட் யூ”
அரபாத் சகோதரர் சப்ரியை அறிமுகப்படுத்தினார். ஃபேஸ் புக்கில் சப்ரி எனது ஃப்ரென்ட் லிஸ்டில் இருக்கின்றார். ஆனால் இன்றுதான் லைவ் இன் கன்சேர்ட். நிஜத்தில் பார்த்து பேசுவதென்பது அலாதியானது. அதனை ஃபேஸ் புக்கால் என்றைக்குமே தர முடியாது. சாரி மார்க் சக்கர்பெக்.
நெடு நேரம் அங்கே பேசக் கிடைக்கவில்லை…அப்போதுதான் பாயிசா அலியும் அவரது கணவரும் பாடசாலை விட்டு வந்திருக்க வேண்டும்…பாடசாலைக் களைப்பை முகத்தில் ப்ளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்திருந்தனர். இருவரும் கற்றுத் தருனர்கள். ஆனாலும் அலுப்பில்லாத புன்னகை…..அதற்கிடையில் பாயிசா அலியின் தயாரிப்பில் பப்பாளி ஜூஸ்……கொஞ்ச நேரம் அங்கிருந்து பேசி விட்டு அதே மட்டக்கிளப்பு வீதியால் பயணம் செய்து கடலூருக்கு அருகில் கடலை அண்டிய படி பிரதான வீதியில் இருக்கின்ற அகன்று விரிந்த ஆல மரத்தின் கீழ் வந்து சேர்ந்தோம்.
எங்களோடு கவிதை நண்பர்கள் பெரோஸ்கானும்…அதற்கப்புறம் நஸ்புல்லாவும் பட்டியலில் இணைந்து கொண்டார்கள். ஐவரும்….மன்னிக்கவும்…என்ட மோனோடு சேர்த்து ஆறு பேரும் வட்டமாக கலர் மங்கிப் போன ப்ளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்து கொண்டு……வேறு என்ன…இலக்கியம்…இலக்கியம்…இலக்கியம்………இலக்கியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்கின்ற ஜோனருக்குள்ளே அடுத்து வருகின்ற இரண்டு மணித்தியாலத்துக்கு தேசப் பிரதிஷ்டம் செய்யப்பட்டோம்.
அரபாத் கடந்த காலத்தைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக் அடித்தார். சகோதரர் சப்ரியின் வார்த்தைகளில் அவர் ஆழமான வாசிக்கின்றார் என்பதனை கண்டு பிடிக்க அவ்வளவு நேரம் பிடிக்கவில்லை எனக்கு அரபாத்தும் சப்ரியும் நிறையப் பறிமாறினர்…..,நஸ்புல்லாவும் பெரோஸ்கானும் தீராத்தாகத்தோடு இலக்கியத்தில் கை தேர்ந்த இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தனர். அதிகம் பேசினோம்…..எல்லாமும் தேவையானவையாகவே இருந்தன.
ஐந்து இலக்கியக்காரர்களின் சுவாரஸ்யமிக்க உரையாடல் எதுவும் “சாரி பாஸ் என்னை பாதிக்கவில்லை” என்ற கணக்கில் எனது மகன் அரீப் அவனது குழந்தை உலகத்தை அங்கே கூட்டி வந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்க்ப்பட்டிருந்த படகுக்கருகில் சென்று எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான்…எங்களது உரையாடல் தொடர்ந்தது. அவ்வப்போது செல்போன் கமராக்கள் ‘ஸ்மைல் ப்ளீஸ்” என்று சொல்லிக் கொண்டிருந்தன.
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்ற அரபாத்தின் பத்தி எழுத்துகளின் தொகுப்பான “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலினை அரபாத் அன்பளிப்பித்தார். அப்புறம் ஏற்கெனவே ஓர்டர் பண்ணியிருந்த தெம்பிலி, சீனி, தேசிக்காய் ஆகிய இன்க்ரீடியன்கள்டங்கிய ஜுசை கடைப் பையன் மரியாதையோடு பரிமாறினான். வாவ்..வாவ்…….கொளுத்துகின்ற வெயிலின் கொடுங்கொலுக்கு செங்கோல் புரிகின்ற இந்த மாதிரி இயற்கை ஃப்ரென்ட்லி பானங்கள் டயறியில் குறித்து வைக்கப்பட வெண்டியவை.
வெயிலெரிக்கினற காலங்களில் கிண்ணியாவில் காளான்கள் லெவலில் திடீரென்று முளைக்கின்ற இந்த மாதிரி சீசனல் பானக்கடைகள் எத்தனையோ இருந்தாலும் இந்த தெருவொரக் கடையில் தருகின்ற தெம்பில் ஜுசுக்குன்னு ஒரு இது இருக்கு…..இதுன்னா ஒரு அது….நுனி நாக்கு ஜென்ம சாபல்யம் அடைந்து தொண்டைக்குழி கண்டாங்கி கட்டிக் கொள்ளுகின்ற கொண்டாட்டம். இந்தக் கடைக்கு அடிக்கடி வந்து தாகத்துக்கு தண்ணி காட்டுவது எனது வழக்கம். அவ்வப்போது சில நாட்களில் தாக சாந்திக்காக எனது ஆட்டம் இங்கேதான் தற்காலிக நிறுத்தம்.
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலை அரபாத் திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. டீ. கிங்ஸ்லி றொபர்ட் அவர்களுக்கு டெடிக்கேட் பண்ணியதற்கான ஜஸ்டிஃபிக்கேஷனை கடந்து போன காலத்தோடு சேர்த்து சொன்ன போது “ஹேட்ஸ் ஓஃப் அரபாத்” என்று சொல்லிக் கொண்டேன்.
இலக்கியம் பேசுகின்ற பொழுதுகளில் நேரம் கடத்தப்படுவது தெரிவதே இல்லை…அந்த மாதிரித்தான் இன்றும்…..பேசிப் பேசித் தீர்த்து….பெரும் சந்தோஷத்தோடு பிரிந்து போது மாலை இருளின் டைட்டில் கடற்கரையில் ஓடிக் கொண்டிருந்தது. நேரமும் தூரமும் இலக்கியக்காரர்களுக்கு எப்போதுமே கணக்கில் இருந்தது கிடையாது.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்…பேசுவோம்…..நமது வார்த்தைகளை அல்லாஹுத்தஆலா பொறுந்திக் கொள்ளட்டும்.
கிண்ணியா சபருள்ளாஹ்

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



Image may contain: Sabarullah Caseem and Arafath Sahwi, people standing, sunglasses and outdoor

அரபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்….என்னை இன்னும் ஆட்டிக் கொண்டிருக்கின்றது.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நான் புகையிரத நிலையங்களை கடந்து செல்லுகையில் கிழக்கே போகும் ரயில் பாரதிராஜாவும், மடக்கி வைக்கப்பட்ட குடையை நிலத்தில் ஊன்றியவாறு ரயில்வே ஸ்டேஷனில் நரைத்த விஜயகுமார் காத்துக் கிடக்கின்ற பாரதி கண்ணம்மா சேரனும், விடுதலையாகி இன்று வருவார் நாளை வருவார் என்ற திரட்சிமிக்க ஏக்கத்தோடு கண்ணுக்கெட்டிய தொலைவில் வந்து கொண்டிருக்கின்ற ரயிலின் எல்லாப் பெட்டிகளிலும் தினம் தினம் தலை முடி வெளுத்த தபூ ஓடோடிப் போய்த் தேடுகின்ற காலாபாணி (சிறைச்சாலை) ப்ரியதர்ஷனும், சில மைக்ரோ நொடிகள் மூளையின் நியூரான்களை நிரடி விட்டுப் போவது போல “ரயில்வே ஸ்டேஷன்” தந்த ஓட்டமாவடி அரபாத்தும் எப்போதும் அவர்களோடு கூடச் செர்ந்து கொண்டு எனக்கு கை காட்டிச் செல்லுவார்கள்.
அந்த ரயில்வே ஸ்டேஷனை இன்னும் மறக்க முடியமாலிருக்கின்றேன் அரபாத்…….பல தடவைகள் வாசித்த கதைகளுல் அதுவுமொன்று என்பதனைச் சொல்லிக் கொண்டு………………இதோ சீனக் குடா ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்ல்லுகின்றேன்…தூரத்தே திருகோணமலையிலிருந்து புறப்பட்ட ரயில் தனது ராட்சத சக்கரங்களால் காதுகளுக்குள்ளே சாக்ஸ் வாசித்துக் கொண்டிருக்கின்றது…….அரபாத்தைப் பற்றி சொல்ல எத்தனிக்கையில் ஏனோ தெரியவில்லை அவரது ரயில்வே ஸ்டேஷன் கதை மனசுக்குள்ளே மஸ்காரா போட்டு மணக்க ஆரம்பித்து விடுகின்றது….
அதே அரபாத்தின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்”……ஐம்பது பத்தி எழுத்துகளின் அல்பம்…..கடந்து போன நினைவுகளினதும் எஞ்சிய ஞாபங்களினதும் எழுத்துத்தட்டு……தனது பத்தி எழுத்துகளில் அரபாத் அனுபவித்தவைகளை நமக்கு எல்லா ரிஸிப்பியிலும் பந்தி வைத்திருக்கின்றார். எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வந்த ஐம்பது பத்தி எழுத்துகளையும் தொகுத்து பத்த வைத்திருக்கின்றது காலச்சுவடு.
கவிதைகளை விட கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை…..அதுவும் தான் கடந்து வந்த பாதையில் எதிர்ப்பட்ட அனுபவங்களை ஒருவர் கற்பனை கலப்படமின்றி நடந்ததை அப்படியே அதே சுவாரஸ்யத்தோடு சொல்லுகின்ற போது ஏற்படுகின்ற உணர்ச்சிகள் கலவைக் குடுவையில் மிதக்கின்ற கால ஐஸ் துண்டங்கள். அப்படித்தான் உணர்ந்தேன் அரபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலை வாசித்து முடித்த போது……
புத்தி மெல்லத் தெரிகின்ற காற் சட்டைப் பருவத்து நினைவுகளில் தொடங்கி தனது எழுத்துலகம், தனது எழுத்துகள்….யதீந்திரா போன்ற புலிக் காதலர்கள் என்று அரபாத் முடிக்கின்ற போது அரபாத்தின் இத்தனை வருட கால வாழ்வின் செய்திகளின் சாராம்சத்தை ஒரு நுண்ணறிவு கொண்ட வாசகன் மிக இலகுவாக அனுமானித்து விடுவான்.
1978ம் ஆண்டைய சூறாவளியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கிடுகு ஓலை வீடுகள்….புயலால் ஆணி பிடுங்கப்பட்ட களிச்சுவர் மாந்தர்களுக்காக ஹெலகொப்டரிலிருந்து பெய்த பாண் மழை என்று ஆரம்பித்து “எழுத்துக்கும் வாழ்வுக்குமிடையில் சத்தியத்தை பேண நினைக்கின்றேன். அதைப் பின்பற்றி ஒழுகவும் செய்கின்றேன்” என்று ஐம்பதாவது பத்தியில் வாக்கு மூலம் வழங்குகின்ற அரபாத் அதே கடைசிப் பத்தியில் “யதீந்திரா போன்றவர்கிளடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருடப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பலிகள் பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?..........என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்பும், மன நோயாளியாக மாற்றப்பட்ட பின்பும், அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட பின்பும், சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்த பின்பும் நீங்கள் பெற்றுக் கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர். ஒரு அரை அமைச்சர், இப்போது ஒரு முதலமைச்சர்” என்கின்ற பராக்களில் வருகின்ற வரிகள் மனிதாபிமானத்தையும் மனிதத்தையும் நேசிக்கின்றவர்களுக்கானது.
அந்தத் துயரம் அசாதாரணமானது. அரபாதின் அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க இங்கே யாருமில்லை. தமிழ் மக்களை பகடைக் காய்களாக்கி தமிழ்த் தேசியம், சுய நிர்யணம் என்கின்ற சொற்களால் அனஸ்தீஷியா போட்டு வேப்பிலை அடித்து ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்தில் ராஜாக்களாகவும் சாம்ராடுகளாகவும் இன்னும் முடி சூடிக் கொண்டுதானிருக்கின்றார்கள் அவர்களுக்கான அரசியல் தலைவர்கள்.
இளமைக்கால ட்ரக்டர் பயணம் இன்டரெஸ்டிங். பாம்புகளுக்கும் தனக்குமான உறவு பற்றி அரபாத் சொல்லுகின்றார்..ஒரு இடத்தில் தான் பயணிக்கின்ற யாருமற்ற அந்தப்பாதையில் காடுகளால் சூழப்பட்ட ஒரு அமானுஷ்ய இடத்தில் வானத்தை முறைத்துக் கொண்டிருக்கின்ற பனை மரமொன்றிலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த கரு நாகம் பற்றி அரபாத் சிலிர்க்கையில் எனக்கு கார்த்தி நடித்த செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படம்தான் ஓடியது.
அந்தப்படத்தில் கார்த்தி ரீமா சென் மற்றும் ஆன்ட்ரியா மற்றும் ராணுவ வீரர்கள் வியட்நாமுக்கு பக்கத்தில் உள்ள காடொன்றில் கேம்ப் அடித்து தங்கி இருப்பார்கள். அப்போது படை படையாக பாம்புகள் அந்தக் கேம்புக்குள் நுழைந்து வெறித்தனமாக வேட்டை நிகழ்த்தும். கேம்புக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த அழகப்பெருமாளுக்கு கரு நாகமொன்று சடாரென்று கொத்தும்…அதே நேரம் ஆன்ட்ரியாவுக்கு முன்னால் இரு கரு நாகங்கள் படமெடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்….பயந்து போய் விட்டேன்…..அந்த மாதிரி அரபாத்தின் பாம்புக் கனவும் அதே கனவு அடுத்த நிஜமாகுவதும் என்று நரம்புகளில் நில நடுக்கம்…அந்த பாம்புப் பத்தியை படித்த போது கனவும் அக்கனவு நிஜமாவதும் ஒரு “கொயின்ஸ்டென்சோ” என்று மனசு குழம்பிக் காண்டிருந்தது.
போர்க்கால பொஸ்பரசுகள், புலிகளின் கஸ்மோராக்கள், பூசாரி ஆட்டம்……ஆயுதக் குழுக்களின் ஹிப் ஹொப் ஆட்டங்கள்…..கொலையுதிர்கால கொடூரங்கள்…..கொழும்பு குண்டு வெடிப்புகள்….தீவிர வாசிப்பு…கவிதை எழுதி பின்னர் கதைதான் தனக்குப் பொறுத்தமென்று கதைகளுக்குள்ளே ட்ரான்ஸ்ஃபோர்மேசன் ஆகிய தருணங்கள்,…….தனது புத்தகங்கள்…..என்று விமிமித்தணிகின்ற அரபாத்தின் நினைவுகள் பௌசர்………….. பௌசரின் முஸ்லிம் குரல் என்று பேசுகின்ற போது மனசு பாரமாக இருந்தது.
போரின் பொதும், 2002 போர் நிறுத்த்தின் போதும் கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட கந்தக நெடியிலான பிரச்சினைகளில் எதுவும் பேசாது மௌனம் மட்டுமே எனது தாய் மொழி என்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புறம்….முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் கட்டற்ற வன்முறைகளினால் உண்மையாகவே கொதித்தெழுந்த முஸ்லிம் இளைஞர்கள் மறு புறம்…ஆகக் குறைந்தது ஓரிருவராவது அனலில் நின்று கொண்டிருக்கின்ற அப்பாவி முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஐஸியூ அவசரத்தில் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த முஸ்லிம் குரல் பத்திரிகையில் இணைந்து அச்சங்களோடும் திகில்களோடும் சேர்ந்து தான் சார்ந்த சமூகத்துக்காக மட்டுமே செய்த சாகசப் பிரயாணங்கள்……முஸ்லிம் குரல் எதிர் கொண்ட சவால்கள்…முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்து முஸ்லிம் குரலுக்கதெிராக எழுந்த மல்யுத்த முல்லாக்கள்……என்று அரபாத் நிறைய பேசியிருக்கின்றார்…….
எழுத்துலகில் தான் எதிர் கொண்ட மனிதர்கள்…சவால்கள்..அச்சுறுத்தல்கள்..என்று அது ஒரு நெடிய பயணம்……..இலக்கியத் திருட்டு….புத்தகம் போட வேண்டுமென்ற ஒரே லட்சியத்தோடு கனவு கண்டு கொண்டிருக்கின்ற புதிய கவிதை ப்ளஸ் எழுத்தாள வர்க்க்தை இன்னோர் தடிமாட்டுக் கூட்டம் அடிமாட்டு லெவலில் சுரண்டி வாழுகின்ற அசிங்கங்கள் என்று அரபாத் தான் எதிர் கொண்ட கொள்ளவு கூடிய அனுபவங்களை எளிமையாக ஆனால் வலிமையாக கொட்டித் தீர்த்திருக்கின்றார். அரபாத்தின் எளிமையான வசன நடையும் இறுக்கமற்ற வசன லாவகமும் அதற்குள்ளே ஒரு சிறு கதையை வாசிக்கின்ற சுவாரஸ்யமும்தான் இந்த பத்தி எழுத்துகளின் ப்ளஸ் சமாச்சாரங்கள்.
எஸ்.எல்எம். ஹனீபாவின் அலட்டலற்ற எஸ்எம்எஸ் மோடிலான பின் குறிப்பு…அரபாத்தின் அறிமுகக் குறிப்பு என்று தன்னைத்தானே ஆட்டிக் கொண்டிருக்கின்ற இந்த அல்பத்தினை அரபாத் திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. கிங்ஸ்லி ரொபர்ட் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். அதற்கான நியாயத்தை மிக நேர்த்தியாக தனது பத்தியொன்றில் நம்மோடு பகிர்ந்திருக்கின்றார். நூறு வீதம் நியாயமானது அரபாத் இந்த அரப்பணம்…சரியான நபருக்கு போய் சேர்ந்திருக்கின்றது.
நான் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலிலிருந்து மெல்ல இறங்கிய பின்னரும் அதில் உட்கார்ந்து கொண்டு இன்னும் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றது என் மெல்லிய மனசு.
கிண்ணியா சபருள்ளாஹ்
2018-05-12

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...