Monday 17 October 2011

வீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகளும்


     சர்வதேச ரீதியாக விபத்துக்கள் குறைவடைந்து கொண்டு செல்கின்ற வேளை ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இலங்கை போன்ற சிறிய தீவுகளில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதனை விஞ்சிய விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


1977ம்ஆண்டு தொடக்கம் 2007ம்ஆண்டு வரையிலான ஆய்வுகளின்படி இலங்கையில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின்  தொகையானது 40000.00 ஆகும். இக்காலப்பகுதியில் 370000.00 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த முப்பது வருடத்தில் 1120848.00 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறினார்.

இலங்கையில் நாளொன்றிற்கு 150 விபத்துக்கள் இடம் பெறுகின்றன. அதில் 5-7மரணங்கள் சம்பவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.

உண்மையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்விபத்துக்கள் பாரிய நெருக்கடியைதோற்றுவிக்கவல்லன. சமூக பொருளாதார சுகாதாரப் பிரச்சினைகளை இவ்விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

75 சதவீதமான விபத்துக்களுக்கு மனிதர்களின் கவனயீனமே காரணமாக அமைந்து விடுகின்றது.

வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சில காரணிகளை நோக்கலாம்.


பாதசாரிகள் வீதி ஒழுங்குக்கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்காமை :
பாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.எனினும் பெரும்பாலான பாதசாரிகள் இந்த ஒழுங்குகளை பின்பற்றுவதில்லை. பாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்வதற்கென முக்கிய இனங்காணப்பட்ட இடங்களில் மஞ்சல் கோடுகளை அமைத்துள்ளது.எனினும் சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு காத்திருக்காமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இடைவெளிக்குள் நுழைய முற்பட்டு விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.

மேம்பாலம் சுரங்கப்பாதைகளும் மக்கள் செறிவாக வீதியை கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சோம்பல் அவசரம் இலகுவாகவும் வேகமாகவும் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற பதற்றம் பாதசாரிகளின் நெரிசல் போன்ற இடர்கள் வீதி விபத்துக்களுக்கு காரணிகளாக அமைந்து விடுகின்றன.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் உள்ள முறை கேடுகள்.

முறையான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குப்பதிலாக இலஞ்சம் ஊழல் முறைகளைப்பின்பற்றி சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை இன்னும் இலங்கையில் சட்டவிரோதமாக நடைபெற்றுவருகின்றது. நாட்டில் அவ்வப்போது சுற்றிவளைக்கப்படும் போலிக்கச்சேரிகள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
குறித்த திணைக்களங்களில் இறுக்கமான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் சமூகவிரோதிகள் சில நுணுக்கங்களை கண்டுபிடித்து  சட்டவிரோதமாக உள் நுழைந்து முறையற்ற சாரதிகளுக்கு  அனுமதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றனர்.

இத்தகைய சாரதிகளால் பெரும்பாலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதுண்டு. வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி ஒழுங்குகள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த எந்த அறிவுமற்ற இவர்களால் சமூகப்பொருளாத பின்னடைவை தேசம் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. 
“இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்கு சாரதி ஆசனத்திற்கு பின்னால் நிற்பதற்கு கூட தகுதியில்லை” என்ற முன்னால் போக்குவரத்து அமைச்சர் ‘டயஸ் அழகப்பெரும’யின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது.

இது நிற்க !


மது போதையில் வாகனம் ஓட்டுவதால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுபோல் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இத்தகைய விபத்துக்களின் பின்புலத்தைகண்டறிந்தும் குறித்த சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்காததன் விளைவு அவர்கள் மற்றுமொரு விபத்து நேரக்காணியாக அமைந்து விடுகின்றனர்.
சில போக்குவரத்துப் பொலிசாரின் ஊழல் இலஞ்சம் பெறும் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் மேசமான சாரதிகளும் இலகுவாக தப்பித்துக்கொள்ளவும் தண்டனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஏதுவாக அமைந்து விடுகின்றன.

வேகமாக வாகனத்தை செலுத்துதல்

இலங்கையில் வாகனத்தை செலுத்தும் அதி வேக முறைகள் நகரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சாரதிகள் அவற்றை கவனத்திற்கொள்வதே இல்லை. 
வளர்ச்சியடைந்த நாடுகளில் சாரதிகளின் கவனத்தைக் கவரும் பொருட்டு ‘நியோன்’ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாகன வீதி வேகத்தடைகள் பொருத்தப்பட்டிருப்பது போல் இங்கும் அவை நடைமுறைக்கு கொண்டு வரப்படல் வேண்டும்.

இலங்கையில் வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கவென போக்குவரத்துப்பொலிசாரும் கருவிகளும் போதாது. பொலிசாரின் கண்காணிப்பை தன் சக சாரதிகளுக்கு சமிக்ஞை மூலம் அடையாளப்படுத்தும் சாரதிகளின் துர்நடத்தையும் விபத்துக்களுக்கு தூபம் போடுகின்றன. 
போக்குவரத்துப்பொலிசார்  நிற்கும் இடங்களில் வேகம் குறைத்து மீளவும் அதி வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்கானிக்கவும் அதிகபட்ச தண்டனைப்பெற்றுக் கொடுக்கவும் இலங்கை போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

பாதை ஒழுங்கையும் கோடுகளையும் மீறி முந்திச்செல்ல எத்தனிக்கும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.இலஞ்சம் பெறாத அதிகாரிகளால் 80 வீதமான விபத்துக்களை குறைக்க வழியுண்டு.

வாகனங்களின் அதிகரிப்பு:

இலங்கையில் அண்மைக்காலமாக தீவிரமாக பின்பற்றப்படும் தி;றந்த பொருளாதாரக் கொள்கையானது கட்டுப்பாடற்ற வாகனங்களின் இறக்குமதிக்கு வழிகோலியுள்ளது. வீதி அபிவிருத்தி திட்டமிடப்படாத தேசத்தில் அதிகரித்த வாகனப்பாவனையும் விபத்துக்களுக்கு காரணியாக அமைந்து விடுகின்றது.


விபத்துக்கள் மட்டுமன்று கால நேர விரயமும் அதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவும் கவனத்திற்கொள்ளப்படவேண்டும். வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் தொகையை விட விபத்துக்களால் பாதிப்புறும் மக்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை வருடாந்தம் ஒதுக்குகின்றது என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.

வீதி விபத்துக்களில் சிக்குப்படும் நபர்கள் ஆபத்தான கடுமையான காயம் சாதாரண காயம் அல்லது மரணம் போன்ற சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாவதுண்டு. இதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவை விட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கே அதிகம் முகம் கொடுக்கின்றனர்.

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
  • கடுமையான வீதி போக்குவரத்து சட்டங்களை உருவாக்கலும் நடைமுறைப்படுத்தலும்
  • பாடசாலை மட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கள் ஆற்றுப்படுத்தல்
  • பொதுமக்களுக்கு பொலிசாரின் மூலம் விபத்துக்கள் மற்றும் வீதி ஒழுங்குகள் பற்றி அறிவுறுத்தல்
  • இரகசிய கமெராக்கள் மூலம் முறைகேடான சாரதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல்
  • போக்குவரத்து துறையில் நிகழும் இலஞ்சம் ஊழல் நடவடிக்கைகளை முற்றாக ஒழித்தல்



விபத்துக்களின் பின் அரச ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகள்

விபத்துக்களின் பின் அதற்குரிய ந~;டயீட்டுத்தொகையைப்பெற்றுக்கொள்ள சில வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் அனேக விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்காததன் காரணமாக உரிய  காலத்தில் இழப்பீட்டுத்தொகையையினைப்பெற முடியாமல் போவண்டு.


தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விபத்தொன்று சம்பவித்த சில நாழிகைகளில் உரிய நிறுவனத்திற்கு அறிவிப்பதன் மூலம் விடுமுறையினை பெற்றுக்கொள்ளவும் குறித்த நிறுவனத்தின் வைத்திய சலுகைகளைப்பெற்றுக்கொள்ளவும் முடியும்.


விபத்தொன்று சம்பவித்த மறு வினாடியில் அவசியம் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.நமது சொந்த வாகனமாயின் அதற்குரிய ந~;டயீட்டைப்பெறவும் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்கவும் பொலிசாரின் அறிக்கை மிக முக்கியம்.கவனக்குறைவான சாரதியை தப்பிக்க விடுவதும் அல்லது சமரசம் பேசுவதும் மற்றுமொரு விபத்துக்கு வழிவிடும் செயலாகும் .


அரசாங்க ஊழியர்கள் கடமைக்குச்செல்லும் போதும் கடமை நிமித்தம் வெளியே செல்லும் போதும் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.அரசாங்க ஊழியர்களின் தவறுகளால் அல்லாமல் பிறரால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையுடன் ந~;டயீடும் பெற்றுக்கொள்ளலாம்.

தாபனக்கோவையின் 12ம்அத்தியாயத்தில்; 09ம்பிரிவில் அவசர விபத்து லீவுக்கான ஏற்பாடுகள் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1986.11.20 திகதியிடப்பட்ட 352ம் இலக்க சுற்றறிக்கையிலும் இது குறித்து விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1993.09.21 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் (23 -93) கடமையில் ஈடுபட்டிருக்கும் போது காயத்திற்குள்ளாகும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ந~;டயீடு வழங்குவது தொடர்பான திருத்திய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்படி சுற்றறிக்கையில் -03ம்பிரிவில் காயத்தின் தன்மைக்கேற்ப மருத்துவ சபையின் சிபாரிசுக்கமைவாக பின்வரும் அடிப்படையில் லீவுகள் வழங்கப்பட வேண்டும் என விதந்துரைக்கப்பட்டுள்ளது.
 
வருடமொன்றுவரை சம்பளமுள்ள லீவுகளும் அதன் பின்னர் ஆறு மாதம் அரைச் சம்பள  லீவுகளும்
 
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஓராண்டு லீவுக்கும் மேலதிகமாக தகைகுறித்தான கடந்த லீவில் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு.
ந~;டயீடு,அல்லது ஓய்வூதியங்கள் திட்டத்தின் கீழ் அரச ஊழியர் ஒருவர் காயமடைந்தால் மரணமடையும்,அல்லது நிரந்தர இயலாமைக்கு உட்படும் உத்தியோகத்தர் ஒருவர் 55 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர் 55 வயதில் இளைப்பாறியதாக கவனத்திற்கொண்டு விபத்தில் சிக்கியவருக்கு ஓய்வூதியக்கணக்கில் அவரது சம்பளம் வைப்பிலிடப்படும்.


காயத்தினால் மரணம் ஏற்பட்டால் ந~;டயீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஓய்வூதிய பணிப்பாளரினால் மரணமடைந்த அரச உத்தியோகத்தரில் தங்கியிருப்போருக்கு 60 மாதச்சம்பளம் ந~;டயீடாக வழங்கப்படும்.


2011.07.02ம்திகதி அரசாங்க நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ அபேகோன் அவர்களினால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்;ட சுற்றறிக்கையின் படி அரசாங்க ஊழியர்களின் விபத்து தொடர்பான மேன்முறையீடுகளுக்கென உயர் மட்டக்குழுவொன்று நியமிக்கப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


அலுவலகர் கடமைக்கு  வரும்போது அல்லது கடமை முடிந்து வீடு திரும்பும் போது விபத்து நேர்ந்திருப்பின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டும்.


  1. அலுவலகர் ஒருவர் சாதாரணமாக வேலைக்கு வரவேண்டிய நேரம் சேவை முடிந்து வீடு செல்ல வேண்டிய நேரம்.
  1. வந்த நேரமும் திரும்பிச்சென்ற நேரமும்.
  1. அலுவலகர் சாதாரணமாக சேவை நிலையத்திற்கு வரும் முகவரி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உள்ள தூரம் வந்த விதம் பிரயாண செய்த தூரமும சென்றிருந்த தூரமும்   (சாதாரணமாக பிரயாண வழிக்கு அப்பாற்பட்ட இடமொன்றில் விபத்து நிகழ்ந்திருப்பின் அது பற்றிய மேலதிக விளக்கம் இணைக்கப்படல் வேண்டும்)
  1. முடியுமான சந்தர்ப்பங்களில் அலுவலரின் கூற்றிலும் விபத்தை நேரில் கண்டோரின் கூற்றுக்களிலும் உள்ளடங்கியுள்ள விடயங்கள் பற்றிய அவதானிப்புகள்.
  1. வார இறுதியில் அல்லது அரச விடுமுறை நாட்களில் விபத்த நிகழ்ந்திருப்பின் குறித்த சேவை நிலையத்தில் பணி புரிவதற்கு முன் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய விபரம்.
  1.  மோட்டார் வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது வேறு வாகனங்களை செலுத்திக் nகhண்டிருக்கைளில் விபத்து நிகழ்ந்திருப்பின் சாரதி அனுமதிப்பத்திரமும். வாகன அனுமதி பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியன உள்ளதா என்பது பற்றிய விபரம்.

(உரிய சந்தர்ப்பங்களில் வரவுப்பதிவேட்டுப்பிரதி சாரதி அனுமதிப்பத்திர இன்சுரன்ஸ் லைசன்ஸ் பிரதிகள் இணைத்து அனுப்படல் வேண்டும்)

 திடீர் விபத்துக்களின் போது அலுவலகரின் விண்ணப்பத்தில் அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

விபத்து நிகழ்ந்து ஒரு வருட காலத்திற்குள் ந~;டயீட்டு விண்ணப்பத்தினையும் உரிய ஆவணங்களையும் தாபனப்பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கல் வேண்டும்.

ஒரு வருடத்திற்கு பிந்திய ந~;டயீட்டு விண்ணப்பங்களுடன் தாமதித்தமைக்கான நியாயமான காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சின் செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்படல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விபரங்களை நோக்கும் போது அரச அலுவலகர் ஒருவர் விபத்துக்களின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய அடிப்படை அறிவைப்பெற்றுக்கொள்ளமுடியும்

விபத்து நடைபெற்றபின் ந~;டயீட்டுப்பணம் கிடைக்காமல் இருப்பதற்கு  ஆவணங்களின் குறைபாடும் முறையாக விண்ணப்பிக்காமையுமே பிரதான காரணியாகும்.

அரச அலுவலகங்களில் மட்டுமல்ல பாடசாலைகளிலும் கடமை தவிர்ந்த ஏனைய புறகிருத்தியப்பணிகளில் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு.


விளையாட்டுப்போட்டி மேலதிக வகுப்புக்கள் அல்லது பாடசாலை அபிவிருத்திகளுக்கான பணிகள் போன்ற செயற்பாடுகளில் முன் அனுமதி பெற்று செயற்படும் போது நிகழும் விபத்திற்கு ந~;டயீட்டைப்பெற விண்ணப்பிக்க முடியும்.

கல்வி அமைச்சில் அல்லது திணைக்களத்தலைவரின் முன் அனுமதி பெற்று செல்லும் கல்விச்சுற்றுலா களஆய்வுகளின் போது ஏற்படும் விபத்துகளுக்கும் ந~;டயீட்டைப்பெற பின்வரும் ஆவணங்களை; சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

  • சம்பளத்திரட்டுப்பதிவேடுகள்
  • பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப்பதிவுகள்
  • நேரத்தை அத்தாட்சிப்படுத்தும் சாட்சியங்கள்
பின்வரும் விபத்துக்களால் பாதிப்பு ஏற்பட்டால் கடமை லீவோ ந~;டயீடோ வழங்கப்படமாட்டாது இதற்காக விண்ணப்பிக்கவும் முடியாது.
  • அரச அலுவலரின் கவனயீனத்தினால் நிகழும் விபத்து
  • அரச அலுவலரின் தவறினால் நிகழும் விபத்து
  • சட்ட விதிகளுக்கு முரணான முறையில் ஏற்படும் விபத்து
  • திணைக்கள கட்டளைகள் வீதிப்பிரமாணங்களை மீறும் வகையில் செயற்பட்டதினால் நிகழும் விபத்து
  • மது போதையில் ஏற்பட்ட விபத்து
சட்டவிதிகளுக்கு முரணாக செயற்பட்டு அரசாங்க ஊழியர் அல்லாத ஒருவர் விபத்தில் காயம்பட்டு பாதிக்கப்படும் போது அவர் எந்தத் தரப்பிலிருந்தும் உதவிகளைப் பெறமுடியாத   நிர்க்கதிக் குள்ளாக்கப்டுகிறார்.


எனவே வீதி ஒழுங்கைப் பேணுவதுடன் வாகனங்களைச் செலுத்தும் போதும் சட்டவிதிகளைப் பின்பற்றி ஒழுகினால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்ந்து கொள்ள முடியும்.

 பிரசுரம்: உண்மை உதயம் மாத இதழ் அக்டோபர் 2011

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...