Wednesday 9 February 2011

உமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'

"......மெலுக்குத்தளுக்கான நடுத்தர வாழ்க்கைப் பொம்மை மானிடர்களையோ, உலக இன்பங்களை ஏக போகமாக அனுபவிக்கும் மாளிகை மனிதர்களையோ ிஜயகாந்தன் கதைகளிலே காண முடியாது. அப்படி யாராவது ஒன்றிருவர் தோன்றினாலும் , அவர்கள் உப பாத்திரங்களாகத்தான் இருப்பார்கள்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைச்சித்தரித்தால் அது மனித வர்க்கத்தின் சித்திரமாகுமா..? " இந்தக்கருத்தை எழுத்தாளர் தி.ஜ.ர.அவர்கள் இரசிகர் ஸ்தானத்தில் இருந்து, ஜெயகாந்தனின் 'ஒரு பிடிச்சோறி' ன் முகவுரையில் தெரிவித்திருந்தார்.
தி.ஜ.ர.வுக்கு இப்போது ஜெயகாந்தனின் இலக்கியம் புரிந்திருக்கும் .பொறுக்கிய சில மனிதர்களை ,ஆசிரியர் ''சில நேரங்களில் சில மனிதர்களி" ல் உலாவ விட்டிருக்கிறார். ஆனால் இந்த "உயர்ந்த" படைப்பை பராட்டாமல் இருக்க முடியாது. அருமையான படைப்பு !

இந்த நாவல் மூலம் கங்காவுக்கு நடந்த அந்த "இளமை விபத்தை" அறியுமாறு அமைத்த விதமும் (அக்கினிப்பிரவேசம் சிறுகதை ), ஜெயகாந்தனே ஆர்.கே.வி.ஆக இருந்து கதையில் "சில நேரங்களில்'' தலை நீட்டுவதும் தமிழ் வாசகர்களாகிய எங்களுக்கு புதிது ! இனிமை ! நாவல் போகும் விதம்தான் பாராட்டும் வகையில் இருக்கிறது.

இதில் வரும் பிரபாகர் ,கங்கா, கனகம், பத்மா,மஞ்சு , வெங்கு மாமா போன்ற முக்கிய பாத்திங்களை சுட்டிக்காட்டும் வித்திலும் ,ஒருவரை மட்டும் குறிக்க வேண்டும் என்னிறில்லாமலும் அமைந்துள்ள கவர்ச்சியான தலைப்பு "சில நேரங்களில் சில மனிதர்கள் '' ஆக இருக்கலாம் என நம்புகிறேன்.
வெங்கு மாமா பாத்திரம் சற்று ஓவர் ! வயதுக்கேற்ற  இயல்புகள் அவரிடமில்லை என்பது என் எண்ணம். பத்தோ, அல்லது பதினைந்து வயதையோ குறைத்திருக்கலாம். இருந்தும் " லேடிவித் எ டாக் " (Lady with a dog) " "லேடி வித் எ டைகர்" பதங்களை  ஆசிரியர் உபயோகிக்கும் போது வெங்குமாமாவின் தன்மையை நாம் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மஞ்சு என்னும் கல்லூரிப்பெண்ணின் வாயைச்சற்றுக்குறைத்திருக்கலாம். அவள் வரும் இடம் படு Bore.
கனகம் என்ற தாய்ப் பாத்திரந்தான் என்னைக்கவர்ந்த பாத்திரம் . இருதலைக்கொள்ளி எறும்பாக, உருக்கமாகப் படைத்திருப்பது நெஞ்சைத்தொடுகிறது .
எந்தத்தாயும், தன் மகள் கெட்டு வந்து நிற்பதை சகிக்கமாட்டாள்.கனகமும் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டதால் , வாழ் நாள் பூரா அவஸ்தைப்படுவதாகக் கூறப்படுகிறது. நல்ல  பாத்திரம், கனகமும், கங்காவும் சம்பந்தப்பட்ட இடங்களில் கங்காவின் தன்மை கொடூரமானது. ஓரிண்டு பாத்திரங்களைத் தவிர மற்றப்பாத்திரங்கள் அவ்வளவு தூரம் கவரவில்லை.
ஜெயகாந்தனின் சிறு கதைகளைப்போல அவரது நாவல்கள் சிறப்புற அமைவதில்லை எனும் என் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். காரணம் , "சில நேரங்களில் சில மனிதர்கள்"தான்...

எம் வரதராஜன்
இலங்கை
' தீபம்'       இதழ்   -- 1973.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...