Wednesday 23 February 2011

எமிலி டிக்கின்சன்

 அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் பரவலாகக் கருதப்படுபவர் எமிலி டிக்கின்சன்.
அவரது தனித்தன்மை வாய்ந்த விலை மதிப்பற்ற கவிதைகள் ஆழமான உணர்வுகளின் அசலான அறிவின் வடிகட்டிய தூய வடிவமாய் அமைந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க இலக்கியத்தின் மையப்போக்கிற்கு வெளியே நிற்பவை.
நாம் நிறைய மாயைகளை நம்மைச்சுற்றி உருவாக்கி வைத்துள்ளோம்.
நம்மை சுற்றி ஏற்படுத்தியுள்ள ஒளி வட்டம் பிறர் நெருங்கிப்பார்த்து விடாதிருக்க நாம் போட்டுக்கொண்ட ஒரு மாயை.
 மாயத்தோற்றங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாழ்வை எளிமையான வார்த்தைகளால் எமிலி டிக்கின்சன் சாடுகிறார். அது நமது முகத்தில் அறைவது போல் இருக்கிறது.

......ஒரு புல் வெளியை உருவாக்கத் தேவை
ஒரு பூச்செடியும் ஒரு வண்டும்
 ஒரு பூச்செடி ஒரு வண்டு
கூடவே ஒரு மாயத்தோற்றமும் .
வண்டுகள் ஒரு சிலவேயெனில்
மாயத்தோற்றம் மட்டுமே போதுமானது...

                         'கண்ணாடியில் மிதக்கும் பிம்பம்.'
எமிலி டிக்கின்சன் கவிதைகள் , பனிக்குடம் பதிப்பகம்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...