Friday 4 January 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் : 31

கடந்த முப்பதாவது பத்திகளில் ஒரு வரலாற்றுப்பதிவு போல் நினைவுகளைத் தொகுத்திருந்தேன்.நினைவுத்தடங்களில் அவ்வப்போது விடுபட்டுப்போன சில குறிப்புகளை சேர்க்கமுடியவில்லை.சில நினைவுகள் என் வாழ்க்கையின் முக்கிய பதிவுகளாகியுள்ளன.சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை சில நேரங்களில் அடிக்கடி கடக்க வேண்டியுள்ளது.அப்போது கடந்த காலங்களின் நிழல்கள் என்னைப் பின்தொடர்வதை உணர்கின்றேன்.நண்பர்களுடன் அவற்றினை பகிரும் போது வலியும்,சமயங்களில் சுகமும் மேவுகின்றது.

காத்தான்குடிக்கு செல்லும் போது மஞ்சந்தொடுவாய் பள்ளிவாயலில் சுடப்பட்டுக்கிடந்த சுகைப் ஹாபிழும்,ஏறாவூருக்கு செல்லும்போது நண்பர் ஜாபிரும்,மருதமுனைக்குச்செல்லும் போது அடைக்கலம் தந்த நினைவுகளும் பல்கும்புறவில் அந்த கருப்பு நாய்,கல்கமுவியில்

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...