Tuesday 27 November 2018

25/11/2018
நேற்றிரவு உண்ட பின் நூறடி உலாவு என்பதற்கொப்ப வீட்டிலிருந்து வீதிக்கு வந்தேன் . முற்றமும் அது தான். கூடவே எனது சின்ன மகளும் 3 1/2 வயது.
நிலவு வானத்தில் ஏகமாய் குந்திக் கொண்டிருந்தது.
மகளிடம் நிலவைக் காட்டினேன். மேகம் வந்து அதனை மூடிப் போனது
அபீ நிலவ அழிக்கிது என்று வருத்தப்பட்டாள்.
இப்ப பாருங்க நிலவு வெள்ளயா போகும் என்று அவள் துயரத்தை துடைத்தேன் . சற்று நேரத்தில் மேகம் விலக பளீரென நிலவு பிரகாசித்தது.
அபீ மேல பாரு என்னப் போல நெலா வெள்ளயா இருக்கு . அவள் கண்களுக்குள் ஓராயிரம் பெளர்ணமிகள் ததும்பி பிரவகிக்க பொங்கித்தான் போனேன்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...