Sunday 3 August 2014

கரை படிந்த துயரம்

நேற்று மாலை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் பேசுவதற்கென்று சில இளைஞர்கள் வருகை தந்தனர்.பேஸ்புக்கில் குளத்தில் குட்டையில் குளித்து விட்டு படம் போட்டு பிலிம் காட்டும் இளைஞர்கள் போலன்றி நியாயமான கவலை அவர்களின் உள்ளத்தில் குடியிருந்ததை அவதானித்தோம்.

பலஸ்தீன் பற்றியெரியும் போது அங்கு குழந்தைகள் கொத்துக்கொத்தாய் மடியும் போது முஸ்லிம்களாகிய நாம் இந்தப்பெருநாளை இவ்வளவு பகட்டாக கொண்டாடத்தான் வேண்டுமா? இந்தக்காணிவேல் களியாட்டங்களில் ஆண் பெண் கலப்பை ஏன் நிறுத்தவில்லை போன்ற நியாயமான கேள்விகளும் சினமும் அவர்களிடம் இருந்தன.

இளைஞர்களின் மனதில் முஸ்லிம் சமூகத்தின் சீரழிவு குறித்த விழிப்புனர்வு ஏற்பட்டுவிட்டால் இலகுவான மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வந்து விடலாம்.

பொன்னூஞ்சல் மற்றும் களியாட்டங்களை நடாத்துபவர்களை அழைத்து கல்குடா உலமா சபை பல உபதேசங்களை செய்து எழுத்து மூமாக சில வரையறைகளையும் வழங்கியது.பள்ளிவாயல்களின் நிறுவாகிகளிடத்திலும் வலியுறுத்தியது.யாரும் அதனை காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் வீதியில் “மேய அனுப்பிவிட்டு“ வீட்டில் ஜாலியாக முடங்கிக்கி்ந்த “ஆண் அசிங்களின்“ இந்த வீரத்தை என்னவென்று நாம் எடுத்துக்கொள்வது.

இலாப நோக்கத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் களியாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கரையை எதிர்பார்க்க முடியாது.

களியாட்டங்கள் குழந்தைகளுக்கானது. அதனை அவர்கள் அனுபவிக்க கடமைப்பட்டவர்கள்.

பெரியவர்கள் காசாவிற்காக அதனை தவிர்ந்திருக்கலாம்.

அங்கே பிள்ளைகளை இஸ்ரேல் அரக்கர்களிடம் பலி கொடுத்து விட்டு கதறும் தாய்மாரின் கண்ணீரில் பங்கெடுத்திருக்கலாம்.

குறை்நத பட்ச கவலை வெளிப்படுத்த முடியாத எங்களின் சகோதரத்துவ உணர்வை என்னவென்று சொல்ல.?

பொறுப்புவாய்ந்த சமூக நிறுவனங்கள் ,அரசியல் தலைமைகள் இருந்தும் மக்களை வழிநடாத்த முடியாமல் போய்விட்ட நிகழ்வு  கல்குடாவின் வரலாற்றில் கரை படிந்த துயரம்.

தஃவா அமைப்புக்கள் நண்மையை ஏவி தீமையை தடுக்கும் நல்லுபதேசங்களை செய்யலாம். அதிகார மையங்கள் அதனை செயற்படுத்தியிருக்கலாம். 

எதிர்காலத்தில் ஆண் பெண் கலப்பு களியாட்டங்கள் கல்குடா முஸ்லிம்களின் வளரிளம் பருவத்தினரை  அதளபாதாளத்திற்கு அழைத்து சென்று விடும் என்ற எச்சரிக்கையை சமூக ஆர்வலரின் கவனத்திற்கு தருகின்றேன்.

சமூக அக்கரையுடன் தட்டிக்கேட்ட இந்த இளைஞர்களின் இதயங்களை அல்லாஹ் தொடர்ந்தும் இஸ்லாத்தில் உறுதியாக வாழச்செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். 

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...