Saturday 21 June 2014

IN OUR TRANSLATED WORLD '( எனது மொழி பெயர்ப்பு உலகினுள்)



IN OUR TRANSLATED WORLD '( எனது மொழி பெயர்ப்பு உலகினுள்) என்ற தலைப்பில் கனடாவிலிருந்து 78 கவிதைகள் அடங்கிய மொழி பெயர்ப்பு தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.கனடாவில் இயங்கும்தமிழ் இலக்கியத்தோட்டம் இந்நூலை வெளியிட்டுள்ளது.பிரபஞ்சத்தில் பரந்து வாழும் பல்வேறு சமகால தமிழ்க்கவிகளின் 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து கவிதைகள் தெரியப்பட்டுள்ளதாக வெளியிட்டாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.எம்.எல்.தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமசாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

இதில் எனது  “இருள்“ என்ற எனது கவிதையும் இடம்பெற்றுள்ளது.
என்னால் வெளியிடப்பட்ட இரண்டு கவிதைத்தொகுப்பிலும் இடம்பெறாமல் தப்பிப்பிழைத்த கவிதை.மூன்றாவது மனிதனில் பிரசுரம் பெற்றது.
எனது கவனத்திலிருந்து தப்பிய இதனை கவிஞர் அனார்தான் அனுப்பி வைத்திருக்கிறார்.

தற்போது கவிதையை வாசிக்கும் போது எனக்குள் ஆச்சரியம். இரண்டு தொகுதியிலும் சேர்க்கப்படாமல் இது எப்படி மறைந்திருந்தது. எனது கவனயீனம்தான் காரணம். இவ்வாறான நல்ல கவிதைகள் சில வெளியே இன்னும் இருக்கின்றன.

 கலாநிதி அ.யோகராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்திய இராணுவத்தைப்பற்றி நான்  எழுதிய ஒரு கவிதையை நினைவுட்டினார்.
அதுவும் புலம் பெயர் சஞ்சிகையொன்றில் பிரசுரம் பெற்றது.தனக்கு மிகவும் பிடித்த கவிதை என்றார்.

இந்தக்கவிதையை கண்டுபிடித்து கனடாவுக்கு அனுப்பி  மொழி பெயர்ப்பு அந்தஸ்தை  வழங்கிய அனாருக்கு மிக்க நன்றிகள்.



2 comments:

  1. UNKAL PANI THODARA VAALTHTHUKKAL,,,PIRARTHTHANAIKAL...>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...