Sunday 28 November 2010

போரில் வெற்றி பெறல்

தனித்துக்கிடந்த முற்றத்தில்
காற்றெழுந்து அழுதது
உயிர்கள் முக்கும் கிணற்றினுள்ளிருந்து
சப்பாத்தொலியும் சிங்கள மணமும் எழுந்தன.

பல யெளவனத்திகளின்
வீர முழக்கத்தினிடை
மாமிசம் தின்று கொழுத்த பாழ் கிணற்றின்
பெரு மூச்சு வீதியெங்கும் கூவித்திரியும்.

சிறு பற்றை,குளம்,சேற்றுவயல்,பாழ்வீடு சகலதிலும்
சீருடையின் வீச்சமிருக்கும்.

குமரிகளின் முலையறுத்து
விதவையின் வீடுடைத்து, புணர்ந்த பின்
அவள் மகவையும் வீசியடிப்பாய் சுவர்கள் திணற.
சீருடையணிந்த சிட்டோன்றை வழிமறித்து கடித்துத்தின்று
மண் கெல்லி மறைத்த பின்னும், உன் சினமாறா
மணாளனை கட்டி வைத்து, அவனெதிரில் துணியை
ருசித்து
தேடியலையுமவர் சனத்தையும் நதி வயிற்றில் உருட்டி பின்
உன் போர் ஓயும்.

செய்தி
போரில் வெற்றி
படையினர் முன்னேற்றம்
ராஜ குமாரத்தி நீயொரு பெண் தானே?

எக்ஸில் - பிரான்ஸ்
2006-06-03


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...