Monday 28 February 2011

காற்றின் விலங்கு

எனக்குள் கவிழ்கிறது 
இருள்.
பொண்ணி வண்டு முட்டையுள் 
மூர்ச்சித்துக்கிடப்பதான வலி.

மரவட்டையைப்போல் 
எனது தேசம்
மிகச்சுருங்கிற்று.

காலாற நடக்கையில் 
ஒரு முரட்டுக்குரல்.
என் கனவைக்குதறிப்போடும்.

அதிஷ்டலாபச்சீட்டில் 
மறைந்திருக்கும் 
வெற்றி எண்களைப்போல்
வாழ்க்கை 
எப்போதாகிலும் 
ஒரு ஓரத்தில் துளிர்த்து
பின் மறைகிறது.

சொல்வதற்கும்>எழுதுவதற்கும் 
இங்கு ஏதுமற்ற அந்தரம்.

மரணத்தின் இடைவிடாத 
உக்கிரப்பார்வை
''விடுதலை""களின் பெயர் கூவி 
தினம் எமை அழைக்கிறது.

சுவாசிப்பதற்கான காற்று காட்டுமே 
என் தேசத்தில் 
சுதந்திரமாக தெரிகிறது எனக்கு.

அதுவும் நீ வரமாட்டாய் என
நிச்சயித்து நான் தூங்கும் 
பகலில் மட்டும்.


25-09-2001 - கீறல் - நிந்தவூர்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...