Monday 7 February 2011

 பொன் முட்டையிடும் தங்க வாத்துகள்.

வெள்ளத்தில் கப்பலோட்டும் கதையை மட்டக்களப்பில் ஓடும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புக்கு இருநூறு ரூபா.ஏனென்று கேட்டால் வெள்ளம் பாய்கிறது என்று கத்துகிறான் நடத்துனர்.
சில்லரை கேட்டால் 'இப்ப என்ன எடுதுட்டு ஓடவா  போறன்'எனச்சசீறுகின்றான். கடைசியில் இறக்கிவிட்டு எடுத்துக்கொண்டு ஓடுவது பலரின் சில்லறையை என்றால் நம்பவா கஸ்டம்.
சில நடத்துனர்கள் வாயால் கேட்டு மீதிப்பணத்தை தருவது அவர்களின் பிறப்பிலே உள்ள நிறை.

இப்படித்தான் வாழைச்சேனை ஓட்டமாவடிப்பகுதியில் இருந்து புறப்படும் தனியார் பஸ்கள்.' பாட்டா விலை 'போல் டிக்கட்டில் சதக்கணக்கு இருக்கும். எடுப்பதோ நான்கு நூறு நோட்டுக்கள்.
கடைசியில் நான் அறிந்தவரை பஸ் முதழாளியை விட கண்டருக்கு தனி வேனும் கடையும் சொத்துக்களும் ஊர் முழுக்க மலிந்து அவரும் 'ஒரு சின்ன பொஸ்'

மத்திய கிழக்கிலிருந்து வரும் பணிப்பெண்களின் பெட்டிகளுக்கு தனிக்கவனமும் பாதுகாப்பும். அவர்களிடம் பெட்டிக்கு அறவிடும் கணக்கு 'பொஸ்சி'ன் கைகளுக்கு வராத சிறு மீன்.நான்காயிரம். இரண்டாயிரம். ரேட்டுகள் பல......
பெட்டி கொண்டு வரும் மைனாக்கள் 'கண்டக்டர் ரைவரை' தனிக் கவனிப்பு !

தனியார் பஸ்சில் கண்டக்டராய் கிடப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்.
உளுத்துப்போன கடைகளில் இரவு பகல் உணவு.அவர்களுக்கோ தனிக்கவனிப்பு. கொக்,பிறிஸ்டல் வெற்றிலை,வாய்க்கு மெல்ல சுவிங்கயம்,அப்பப்பா என்ன உபசரனை.சில கடைகளிலோ தண்ணியும் கொடுப்பதாக அரசல் புரசலாக காதில் விழுந்தது.
ஏஜென்னசி கொண்டு வரும் பெண்மான்களுக்காகவே பஸ் முறுக்கேறும்.பின்னர் என்ன  பாட்டும் கூத்தும் சப்புக்கொட்டும்

அறபிக்கிளிகளின் கிணுகிணு ஒலியும் ,ஒரு ரியாலுக்கு வாங்கிப்பீச்சியடித்த "சென்டும்" ஆ ஓட்டமாவடி பஸ்சுக்குள் அமர்க்களம் பார்க்கனுமே...காட்டுக்குள் விறகெது ,திறாய் சுண்டி காலத்தை கடத்திய  கிளிகளின் உதடுகளில் என்ன  பாட்டு என்ன கூத்து நெஞ்சு பொறுக்கதில்லயே !

'சப்புகள் 'நடந்து வரும் அழகே தனி. கருப்பு பெட்டி (சினிமாவில் கடத்தல்காரர்கள் பாவிக்கும் இனம்.) தலையில் சில பேர் தொப்பி அணிந்திருப்பர்.சாரமும் சேர்ட்டும். கொஞ்சம் படித்தவன் களிசன் போட்டிருப்பான்.
ஒரு மணி நேரம் தாமதித்தே பஸ்சில் ஏறுவர். கேட்டால் மெடிக்கல் முடியல்ல அல்லது இன்ன பிற........காரணங்கள் இல்லாவிட்டாலும் அவரின் காரணம் எடுபடத்தான் வேண்டும்

அவருக்குப்பினால் பெண் சிங்கங்கள் .அறபு நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் அருள் பணி வழங்கப்பட்ட "ஹீருள் ஈன்கள்"                   'சப்புகள்'   தனியார் பஸ்களுக்கு  .பொன் முட்டையிடும் தங்க வாத்துகள்.

தனியா பஸ் அரக்கர்களின் கொடுமையிலிருந்து இந்த தேசத்தை காக்க பாதுகாப்புச்  செயலரே ஏதாவது செய்யுமய்யா !

1 comment:

  1. உண்மையை கவிதை வடிவில் கூறியிருக்கிறீர்கள் நன்றாக உள்ளது

    ReplyDelete

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...