Thursday 27 January 2011

சாபம்

காற்றின் துவர்ப்பு 
நுணி நாவில் கரைகிறது
விழியழுத உவரலைகள் 
நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.

என் செய்தீர் வீரர்காள் என்னினத்தானை?
அத்தாங்கு கொண்டள்ளி
சுடு மணலில் கொட்டிய மீன்களென
வெடி குண்டு கொண்டல்லோ 
குழியிட்டு மூட வைத்தீர்.

கடலின் அந்தரத்தில் 
பிரலாபித்ததெம் ஆத்மா.
சாவென்னும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள்
கொன்றொழித்தீர்.

சக மொழி பேசுவோனை,
சக தேசத்தானை 
ஏனங்கு குறிவைத்தீர்?

வரி தந்தோம் (தருகிறோம்)
நீவீர் பயந்தொதுங்கி வந்த போது
இடம் தந்தோம்.
உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம்.

எமக்கென நீர் எது தந்தீர்
வீரர்காள்?

இதோ
அநீதி இழைக்கப்பட்ட
என்னினத்தானின் சாபம்
உமை  நோக்கி எழுகிறது. நிச்சயம் ஓர் நாள் அது 
உங்கள் விடுதலையை பொசுக்கும்.

கீறல் 01,2002

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...